மகாராஷ்டிரா அமைச்சராகும் போது உணர்ச்சி வசப்பட்ட காங்.எம்எல்ஏ.. கண்டித்த ஆளுநர்.. 2 முறை பதவியேற்பு
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு வைபவத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் இரண்டு முறை பதவி ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் அவர் உணர்ச்சி மிகுதியில் பேசிய கூடுதல் வார்த்தைகள் தான்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, சுமார் 36 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
ஷரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். கடந்த மாதம், அவர் பாஜகவுடன் பக்கபலமாக இருந்து தேவேந்திர ஃபட்னவிஸ் உடன் துணை முதல்வரானார். .

முறியடித்தார்
ஆனால், உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு சோதனைக்கு உத்தரவிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் பதவி விலகினார், அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜகவின் 80 மணி நேர முயற்சியை இதன் மூலம் அஜித் பவார். சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இன்று அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

கே.சி.பத்வி
இந்நிலையில் இன்று உத்தவ் அமைச்சரவையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவான கே.சி. பத்வி (61 வயது) அமைச்சராக பதவி ஏற்ற போது உணர்ச்சி வசப்பட்டதால் ஆளுநர் பகத் சிங், கண்டித்தார்.

வாக்காளர்களுக்கு நன்றி
காங்கிரசின் கே.சி.பத்வி, சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது, ஆளுநர் சொல்வதை மட்டும் திருப்பி சொல்லாமல் கூடுதலாக சில வாக்கியங்களை பேசினார். தனது தொகுதி மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

மீண்டும் பதவி பிரமாணம்
இதை கண்டித்த ஆளுநர் "நெறிமுறைக்கு எதிரானது" என்று கூறியதுடன், பதவி பிரமாண வரிகளை தான் சொல்வதை மட்டும் சொல்ல வேண்டும் என்றும் கண்டித்தார். இதையடுத்து கே.சி.பத்வியை சுற்றியிருந்த மூத்த தலைவர்கள் அவரை நெறிமுறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியதால் மீண்டும் சத்திய பிரமாணம் எடுத்து அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications