மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.
மகாராஷ்டிராவில் பால்கார் பகுதியில் இன்று காலை 5.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தையடுத்து மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications