ஹரியானா அடியில் காங்கிரஸ் முழிச்சிடுச்சாம்.. மகாராஷ்டிரா 'தலைக'ளுக்கு வாய்ப்பூட்டு போட்ட டெல்லி!
மும்பை: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாமல் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ், அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரா பக்கம் உடனே கவனத்தை திருப்பி இருக்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவர்கள் வழக்கம் போல ஆளுக்கு ஒருவராக முட்டி மோதும் போக்கை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவு போடுவதற்காகவே மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலாவை நேற்றே மும்பைக்கு அனுப்பி வைத்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்த முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது காங்கிரஸ். பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை இலாவகமாக வளைத்துப் போடாமல் உட்கட்சி மோதலில் ஹரியானா தலைவர்கள் மும்முரம் காட்டியதால் கோட்டை விட்டுவிட்டனர்.

இந்த நிலையில் ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலாவை உடனே மும்பைக்கு செல்ல உத்தரவிட்டதாம் காங்கிரஸ் மேலிடம். இதனையடுத்து மும்பைக்கு பறந்து வந்த ரமேஷ் சென்னிதாலா பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்டவை தொடர்பாக ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவிக்கும் போக்கை உடனே நிறுத்தியாக வேண்டும் எனவும் கறாராக உத்தரவிட்டுள்ளாராம் ரமேஷ் சென்னிதாலா.
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மகா விகாஸ் அகாடி அணியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகள் ஆதரவு அவசியம் என்றாலும் காங்கிரஸுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் பல தொகுதிகளில் காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மட்டுமல்லாமல் மகா விகாஸ் அகாடி அணியிலும் குழப்பம் தீவிரமானது. இத்தகைய போக்கினால்தான் மத்திய பிரதேசம், ஹரியானாவில் அடிவாங்கினோம் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ உடனே ரமேஷ் சென்னிதாலாவை மும்பைக்கு அனுப்பி வாய்ப்பூட்டு போட வைத்திருக்கிறதாம் டெல்லி காங்கிரஸ் மேலிடம்! ஓஹோ முழிச்சுடுச்சோ!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications