அப்போ அந்த ரூ.15 லட்சம்? பாஜகவின் வாக்குறுதிகள் எல்லாம் ஏப்ரல் ஃபூல் - கலாய்த்த சிவசேனா எம்.பி.
மும்பை: வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், கருப்புப் பணம் மீட்கப்படும் என்பன போன்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முட்டாள்கள் தின நகைச்சுவை என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக ஏமாற்றி மகிழவும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் சாயம் பூசிக்கொண்டு விளையாடவும் செய்கின்றனர்.
அதேபோல் மீம் கிரியேட்டர்களுக்கும், சமூக வலைதள பதிவர்களுக்கும் முட்டாள்கள் தினம் என்பது சூப்பரான கான்செப்டாக மாறிவிட்டது. அந்நாளில் நிகழ்கால அரசியல் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள், விமர்சனங்கள் என அனைத்தையும் முட்டாள்கள் தினத்தோடு ஒப்பிட்டு மீம்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியான நேற்றும் அதுபோல் ஏராளமான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த பாணியை தற்போது அரசியல் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கையில் எடுத்து இருப்பதை நேற்றைய தினம் காண முடிந்தது.

பாஜகவை முட்டாள்கள் தினத்தோடு ஒப்பிட்ட சிவசேனா எம்.பி
இதில் முதன்மையானவர் சிவசேனாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜகவின் நெருங்கிய நட்பு கட்சியாக திகழ்ந்த சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து தொடுத்து வரும் சஞ்சய் ராவத், நேற்றும் பாஜக அரசை முட்டாள்கள் தினத்தோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

ரூ.15 லட்சம் வழங்கும் திட்டம் ஏப்ரல் ஃபூல்
நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளான 'அச்சே தின், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், கருப்புப் பணம் மீட்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்' போன்றவை முட்டாள்கள் தின நகைச்சுவைகள்." என்றார்.

பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்
"அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என பாஜக கூறி வருவதும் ஏப்ரல் ஃபூல் நகைச்சுவைதான். கடந்த சில ஆண்டுகளாக இதுதான் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது." என்றார்.

7 ஆண்டுகளாக முட்டாள்களாக்கப்படும் மக்கள்
தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசிய அவர், "ஆட்சியாளர்கள் எப்போதும் சாமானிய மனிதனை முட்டாளாக்கப் பார்க்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்கள் முட்டாள்கள் ஆக்கப்படுகின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் பாஜக ஆளாத மாநிலங்களில் சோதனையிட்டு குழப்பத்தை உண்டாக்குகின்றனர்." என்றார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது?












Click it and Unblock the Notifications