பாபா சித்திக் கொலைக்கு இடையே..சட்டென சல்மான் கானுக்கு உயர்த்தப்பட்ட பாதுகாப்பு! ஏன்? யாரந்த லாரன்ஸ்?
மும்பை: முன்னாள் அமைச்சரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் நேற்று மாலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டுக்கு வெளியே பாதுகாப்பு கூட்டப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக், மும்பையின் பாந்த்ரா கிழக்கில் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்சிபி தலைவர் பாந்த்ராவில் (கிழக்கு) நிர்மல் நகரில் உள்ள கோல்கேட் மைதானத்திற்கு அருகிலுள்ள அவரது மகன் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் அலுவலகத்தில் இருந்தார். எம்எல்ஏ அலுவலக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின் இரவு 9.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இருந்து பாபா சித்திக் வெளியேறினார்.

வெளியே வந்த சில நிமிடங்களில் பாபா சித்திக்கை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. கைக்குட்டையால் முகத்தை மறைத்திருந்த மூன்று பேர், தங்கள் காரில் இருந்து இறங்கி பாபா சித்திக்கை சுட்டு உள்ளனர். அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்த நிலையில்.. சரியாக அந்த நேரத்தில் பாபா சித்திக் மீது மூன்று ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.
படுகாயமடைந்த சித்திக் மார்பில் சுடப்பட்டு கீழே விழுந்தார். அவர் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். துப்பாக்கிச் சூட்டில் 9.9 மிமீ கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதுகாப்பு: முன்னாள் அமைச்சரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் நேற்று மாலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டுக்கு வெளியே பாதுகாப்பு கூட்டப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளான ஹரியானாவைச் சேர்ந்த கர்னைல் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது, தற்போது தாங்கள் சிறையில் உள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர் ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர்தான் இப்போது பாபா சித்திக் கொலை வழக்கிலும் மாட்டி உள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அரசியல், மத கோணத்தையும் ஆய்வு செய்ய உள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் காரணமாகவே சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. சல்மான் கான் நேற்று இரவு லீலாவதி மருத்துவமனைக்குச் சென்று தனது சித்திக் குடும்பத்தைச் சந்தித்தார். பாபா சித்திக் குடும்பத்தினரிடம் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்தார்.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் கடந்த ஏப்ரல் 14 அன்று, சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதல் நடத்திய விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகியோர் குஜராத்தில் பின்னர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications