இதெல்லாம் வேற லெவல்.. அம்பானி வீட்டு கல்யாண பத்திரிக்கையை பார்த்தீங்களா.. திறந்ததும்! ஆ.. என்ன இது?
மும்பை: முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ் மிகவும் ஆடம்பராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் வைரலாவதால் நெட்டிசன்கள் ஸ்டன் ஆகி போயிருக்கிறார்கள்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இவருக்கும் இவருடைய பள்ளித் தோழி ராதிகா மெர்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. இருவருக்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

இந்த திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து விஐபிக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் திருமண நாளுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆடம்பரமான அழைப்பிதழ் ஒரு கோயிலை போன்று பெட்டியில் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது.

அதை திறந்தவுடன் திருமண விவரங்கள் தெய்வ உருவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை திறந்தவுடன் அதில் மங்கள இசையும் விஷ்ணு சகஸ் ஒலிக்கிறது. பெட்டியின் உள்ளே தெய்வங்களில் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட விக்கிரகங்கள் உள்ளன.
திருமண நிகழ்ச்சிகளுக்கான வெவ்வேறு அழைப்பிதழ் அட்டைகள் உள்ளன. திருமணத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிள்ளையார், விஷ்ணு, லட்சுமி, ராதா கிருஷ்ணா, துர்கை உள்ளிட்டோரின் படங்கள் உள்ளன. அதில் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என கைகளால் எழுதப்பட்ட கடிதமும் இருக்கிறது.

அதில் சிறிய விளக்குகள் உள்ளன. கைகளால் நெய்யப்பட்ட ஒரு பட்டு சால்வையும் அந்த பெட்டியில் உள்ளது. அது காஷ்மீர் கலைஞர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்டது. அதுபோல் உலர் பழங்களும் இருந்தன. இந்த அழைப்பிதழ்கள் சினிமா, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுகிறது. முகேஷ் அம்பானி வீட்டு விசேஷங்கள் என்றாலே அது ஆடம்பரத்தைத்தான் குறிக்கும். அழைப்பிதழே இப்படி இருக்கும் போது உணவு, உபசரிப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தமே மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் நீடா அம்பானி அணிந்திருக்கும் உடை, அணிகலன்கள் மற்றவர்களின் கவனத்தை பெறும். அது போல் ராதிகாவுக்கு ஆனந்த் ஒரு பச்சை நிற வைர நெக்லஸ் பரிசாக கொடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications