போட்டோ எடுத்தபோது குறுக்கே போன நபர்.. காலால் எட்டி உதைத்த பாஜக மூத்த தலைவர்! விளக்கத்தை பாருங்க
மும்பை: மகாராஷ்டிராவில் போட்டோ எடுத்தபோது குறுக்கே வந்த தொண்டரை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராவ்சாகேப் தன்வே தனது காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

தற்போது இந்த 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் மீண்டும் வென்று அரியணை ஏறும் வகையில் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ராவ்சாகேப் தன்வே, சிவசேனா கட்சியின் முன்னாள் அமைச்சரான அர்ஜூன் கோட்காரை சந்தித்தார். அப்போது அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கினார். அதன்பிறகு ராவ்சாகேப் தன்வே மற்றும் அர்ஜூன் கோட்கார் ஆகியோர் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த வேளையில் ஒருவர் திடீரென்று போட்டோவுக்கு குறுக்கே வந்தார். இதனை கவனித்த ராவ்சேகேப் தன்வே தனது காலால் அந்த நபரை எட்டி உதைத்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து விலகி நின்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. பலரும் ராவ்சாகேப் தன்வேயின் செயலை விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் செயல்பட்டு வரும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், ‛‛ராவ்சாகேப் தன்வேக்கு கண்டிப்பாக கால்பந்து கொடுக்க வேண்டும். பாஜகவில் செயல்பட்டு வரும் தொண்டர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டுமா? என்பதை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.
இதற்கிடையே தான் ராவ்சாகேப் தன்வேயிடம் உதைப்பட்ட நபர் நான் அவரது நண்பர் தான். இருவருக்கும் 30 ஆண்டு பழக்கம் உள்ளது என்று கூறியுள்ளார். இதுபற்றி உதைப்பட்ட நபர் கூறுகையில், ‛‛ நான் ராவ்சாகேப்பின் நெருங்கிய நண்பர். இருவருக்கும் 30 ஆண்டு நட்பு உள்ளது. அவர் எட்டி உதைத்ததாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. நான் ராவ்சாகேப்பின் சட்டையை தான் சரிசெய்ய முயன்றேன்'' என்று கூறியுள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications