முடிவுக்கு வந்தது இழுபறி.. மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. தேதி குறித்த பாஜக!
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இன்னும் புதிய அரசு பதவியேற்கவில்லை. தொடர்ந்து மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பதில் சஸ்பெண்ஸ் நீடித்து வந்த நிலையில் இந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது. பாஜக, சிவசேனா (ஷிண்டே), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் ஒருவாரம் ஆன போதும் கூட அங்கு இன்னும் புதிய அரசு பதவியேற்கவில்லை.

இதற்கு முதல்வர் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததே காரணமாக இருந்தது. ஏக்நாத் ஷிண்டேவும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்ததால், பாஜகவுக்கு இந்த விவகாரத்தில் பெரும் தலைவலியே ஏற்பட்டது. பாஜகவும் முதல்வர் பதவியை தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தது.
இதற்கு மத்தியில் முதல்வர் விவகாரம் மற்றும் கூட்டணி கட்சிகள் இடையேயான அதிகார பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கடந்த வியாழக்கிழமை ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக), அஜித்பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் டெல்லி விரைந்தனர். அவர்கள் அன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.
இதில் முதல்வர் பதவியை பாஜகவுக்கு வழங்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதை ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டாலும், அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை கேட்டதால் இழுபறி நீடித்தது. மகாராஷ்டிரா திரும்பிய பிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊருக்கு சென்றார். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு இடையே, வரும் 5 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்று பாஜக நேற்று அறிவித்தது. இத்தகைய பரபரப்புக்கு நடுவே, பாஜக எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக ஏக்நாத் ஷிண்டே இன்று காலை கூறினார். இதனால், மகாராஷ்டிராவில் ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
அதேவேளையில், தேவேந்திர பட்னாவிசுக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படுமா அல்லது முரளிதர் மோஹோல் நியமிக்கப்படுவாரா? என்ற பேச்சு அடிபட்டது. இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராகப்போகிறார் என்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் எனவும் அதில் சட்டமன்றக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் பாஜக மூத்ததலைவர் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications