"அந்த" 1:30 மணி நேரம்.. நைட் 7 மணிக்கு கரெக்ட்டா கரண்ட் போய்டுமாமே.. நம்ம ஊர்லதான்.. ஏன் தெரியுமா
மகாராஷ்டிரா கிராமத்தில் ஒன்றரை மணி நேரம் கரண்ட் கட் செய்யப்படுகிறது
மும்பை: ஒரு கிராமத்தில், கரெக்ட்டா இரவு 7 மணி முதல் 8.30 மணி கரெண்ட் ஆப் செய்யப்பட்டு விடுகிறதாம்.. ஏன் தெரியுமா?
இப்போதெல்லாம் நம்மால் செல்போன் இல்லாமல் இருக்க முடிவதில்லை.. டிவி இல்லாமல் கூட இருந்துவிட முடியும் சூழலில், செல்போன் இல்லாமல் சான்ஸே இல்லை.
ஆனால், இது எல்லாவற்றிற்குமே அடிப்படை கரண்ட் என்பதை மறுக்க முடியாது.. அதுவும் இல்லாமல் இன்றைய சூழலில் மின்சாதனங்களின் பயன்பாடு இல்லாமல் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைமையும் உருவாகிவிட்டது.

விசித்திரம்
இப்படி செல்போன், டிவிக்கு அடிமையாகிவிடும் மனிதகுலத்தை நினைத்து யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.. ஆனால், ஒரு கிராமம் கவலைப்படுகிறது.. டிவி இல்லாமல், செல்போன் இல்லாமல் நம்மால் கொஞ்ச நேரமாவது இயல்பாக இருக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறது.. இந்த கிராமம் மகாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்டத்தில் உள்ளது.. அதன் பெயர் மோஹித்யாஞ்சே வத்காவோன்.

ஆச்சரியம்
இந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளார்கள்.. அதன்படி, தினமும் மாலை 7 மணி முதல், இரவு 8.30 மணி வரை செல்போன், டிவி, கம்ப்யூட்டர், டேப்லட் போன்ற அனைத்துவகையான எலக்ட்ரானிக் சாதனங்களையும் முற்றிலும் அணைத்து விடுகின்றனர்.. ஒருவேளை கரண்ட் இருந்தால், இவைகளை உபயோகிக்க சொல்லி, உள்உணர்வு தூண்டும் என்பதால், கரண்ட்டையே கட் செய்து விடுகிறார்கள்.. தினமும் நைட் 7 மணியானதும், அந்த கிராமத்தில் ஒரு சைரன் ஒலிக்குமாம்.. அந்த சத்தம் கேட்டதுமே கரண்ட்டை அணைத்து வைத்துவிடுவார்களாம்.

விநோதம்
இதைவிட இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? கரண்ட் போகும் அந்த ஒன்றரை மணி நேரத்தை, பயனுள்ள வகையில் செலவழிக்கிறார்களாம்.. புத்தகங்கள் படிப்பது அல்லது விளையாட்டு, என கற்றல் செயல்பாடுகளில் கிராம மக்கள் ஈடுபடுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஏதாவது சமூகத்தை தாக்கி கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையை கையில்எடுத்து, அது தொடர்பான விவாதங்களையும் நடத்துவார்களாம்.. இரவு 8.30 மணிக்கு மறுபடியும் சைரன் ஒலிக்கும்.. அப்போது கரண்ட் வந்ததும், எலக்ட்ரானிக் சாதனங்கள் பழையபடி ஆன் செய்யப்பட்டுவிடுமாம்...

விசித்திர பழக்கம்
கிராம ஊராட்சி தலைவர் விஜய் மோஹிதே என்பவர் இப்படி ஒரு யோசனையை சொல்லி உள்ளார்.. முதலில் அந்த மக்கள் இதற்கு தயங்கி உள்ளனர்.. அதற்கு பிறகு, சமூக நல ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என பலரிடம் விஜய் சொல்லவும், அவர்கள் அந்த யோசனையை வரவேற்றதுடன், கிராம மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்... அதற்குபிறகுதான் கிராமத்தினர் இதற்கு சம்மதித்தார்களாம். கடந்த சுதந்திர தினத்தன்று இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளனர்.. அப்போதிருந்து அந்த கிராமத்தில் சைரனும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.. பயனுள்ள வகையில் அந்த ஒன்றரை மணி நேரத்தை கழிய ஆரம்பித்துவிட்டது.. டிஜிட்டல் நச்சு உலகத்திலிருந்து அம்மக்கள் விடுபடவும் ஆரம்பித்துவிட்டனர்.. சபாஷ்..!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications