பிரதமர் மோடி மாஸ்க் போடவில்லை.. அதனால் நானும் போடவில்லை.. சிவசேனா எம்பியின் குபீர் விளக்கம்
சஞ்சய் ராவத் பிரதமர் மோடியை கிண்டடித்துள்ளார்
மும்பை: பிரதமர் மோடி மாஸ்க் அணிவது கிடையாது.. அவர் இந்த நாட்டின் தலைவர் என்பதால், நானும் மோடியை பின்பற்றுகிறேன் என்று எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் தற்போது கொரோனாவைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.
அம்மாநிலம் முழுவதும் மொத்தம் 5,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக மும்பையில் மட்டும் 3,671 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..

மகாராஷ்டிரா
நேற்றைய தினம் ஒரே நாளில் 198 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. மும்பையில் மட்டும் 190 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது... அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாலசாகேப் தொராட்டுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது... இது அரசியல் கட்சியினரிடையே பீதியை தந்து வருகிறது...

நாசிக்
இந்நிலையில், சிவசேனாவின் சீனியர் தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் நாசிக்கில் நடந்த நிகழச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, மாஸ்க் போடாமல் இருந்தார்.. நிகழ்ச்சி முடிந்ததும் இதை பற்றி செய்தியாளர்கள் ஏன் மாஸ்க் போடவில்லை என்று கேட்டனர்.. அதற்கு சஞ்சய் ராவத், "பிரதமர் மோடி, நாட்டு மக்கள் எல்லாரையும் மாஸ்க் அணியுமாறு சொல்கிறார்.. ஆனால் அவரே மாஸ்க் அணிவது கிடையாது.. ஆனால், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாஸ்க் அணிகிறார்...

தலைவர்
மோடி இந்த நாட்டின் தலைவர் என்பதால், நானும் மோடியை பின்பற்றுகிறேன்... பொதுமக்களும் மாஸ்க் அணிவதில்லை. இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அனைவருமே உஷாராக இருக்க வேண்டும். இப்போது தடை உத்தரவுகள் அமலில் உள்ளது... இது நிச்சயம் பொருளாதார வளா்ச்சியை பாதிக்கும் என்றாலும், பகல் நேரத்தில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன்..

பாஜக
சுப்ரியா சுலே, அவரது கணவர், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரஜக்த் தான்புரே, வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனாவைரஸ் கண்டறியப்பட்டுள்ளத.. அதனால் பொது நிகழச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.. எம்பியின் இந்த பேச்சு பாஜகவில் எரிச்சலை கிளப்பி விட்டு வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications