எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே சொன்னது என்ன? பரபரப்பில் சிவசேனா..!
மும்பை: அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, நிச்சயம் கட்சியில் இணைவார் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

இதனைத்தொடர்ந்து அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மேலவை தேர்தலில் பாஜகவின் 5 எம்எல்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதில் சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றி பாஜக 5 எம்எல்சி இடங்களை பிடித்து இருக்க முடியாது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென கட்சி கொறடாவாகவும், அமைச்சராகவும் உள்ள சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அங்கு அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். அவர் 35க்கும் மேற்பட்ட ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.
இதனிடையே மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் சிவசேனா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சிவசேனா எம்எல்ஏ-க்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே நிச்சயம் கட்சிக்கு மீண்டும் வருவார். சிலர் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே அவர்களுடன் நாம் கைகோர்த்திருந்தபோது, ஏராளமான பிரச்னைகளை சந்தித்துள்ளோம். அதனால் நாம் ஏன் மீண்டும் அவர்களோடு இணைய வேண்டும் என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications