சென்னை, மும்பை, டெல்லி.. 40+ சொத்துகள் ஒரே நாளில் முடக்கம்.. அனில் அம்பானிக்கு சிக்கல் மேல் சிக்கல்
டெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான வழக்கில் சுமார் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளது. இதில் மும்பையின் பாலி ஹில்லில் உள்ள ஒரு வீடு, டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் சென்டர் மற்றும் எட்டு நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் அடங்கும்.
இந்தியாவின் மிக பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ். அதன் நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி இடையே நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக மோதல் எழுந்தது. இதையடுத்து இருவரும் அம்பானியின் நிறுவனங்களைப் பிரித்துக் கொண்டனர்.

அனில் அம்பானி
அப்போது அனில் அம்பானிக்கு டெலிகாம், பைனான்ஸ், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை கிடைத்தது. இருப்பினும், அவரால் தனது நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அவரது பல்வேறு நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கின. மேலும், அவர் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்களும் எழுந்தன. பல ஆண்டுகளாகவே அவர் மீது இந்த வழக்குகள் நடந்து வந்தன. இதற்கிடையே அவர் மீதான வழக்குகள் இப்போது வேகமெடுத்துள்ளன.
ரூ.3,084 கோடி சொத்துகள்
இந்தச் சூழலில் தான் சுமார் ரூ.3,084 கோடி மதிப்பிலான அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அக்டோபர் 31ம் தேதி இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்துக்கள் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, நொய்டா, காஜியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி ஆகிய பகுதிகளில் குடியிருப்பு யூனிட்கள், அலுவலக வளாகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் திரட்டப்பட்ட நிதியைத் திசைதிருப்பி, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாகச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புகார் என்ன!
2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 2,965 கோடியும், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் யெஸ் வங்கி முதலீடு செய்திருந்தது. 2019 டிசம்பரில் இவை வாராக்கடனாக மாறி, இந்த இருநிறுவனங்களிலும் முறையே ரூ. 1,353.50 கோடி மற்றும் ரூ. 1,984 கோடி நிலுவையில் இருந்தன.
நிதி மோசடி
ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிதியை நேரடியாக அனில் அம்பானி குழுமத்தில் முதலீடு செய்வது செபி விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி, பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிதி, யெஸ் வங்கியின் மூலம் மறைமுகமாக அனில் அம்பானியின் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. அது தொடர்பாகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை
இந்த விசாரணையில் அமலாக்கத் துறை பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. உரிய சோதனை எதுவும் இல்லாமல்.. சில சமயம் கடன் விண்ணப்பம் வருவதற்கு முன்பே கூட கடன் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. பல செக்யூரிட்டி ஆவணங்கள் காலியாகவோ அல்லது தேதி கூட குறிப்பிடப்படாமல் இருந்தன.. மேலும் கடன் கோரி விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு முறையான பிஸ்னஸ் கூட இல்லை என்பதும் தெரிய வந்தது.
அதேபோல ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிரான மோசடி வழக்குகளிலும் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரூ. 13,600 கோடிக்கு மேல் கடன் திசை திருப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications