அடுத்த பஞ்சாயத்து.. பெண் போலீஸை தாக்கியதாக புகார்.. முன்ஜாமீன் கோரிய அர்னாப் கோஸ்வாமி தம்பதி
மும்பை: பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அவரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன்கோரி அர்னாப் கோஸ்வாமியும் அவரது மனைவியும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2018-ம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்கு பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாக சொல்லப்படுகிறது..
இந்த விவகாரத்தில் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் தற்கொலைக்கு தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

விசாரணை
ஆனால், அந்த வழக்கு அப்போதே முடித்து வைக்கப்பட்டது என்றாலும், மறுபடியும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.. மேலும் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீனும் வழங்கியது.

தாக்குதல்
ஆனால், இந்த விவகாரம் அத்துடன் முடியவில்லை.. கடந்த 4-ம்தேதி லோவர் பரேலில் பகுதியில் உள்ள வீட்டில் அர்னாப் கோஸ்வாமி இருந்தபோது, போலீஸார் அவரை கைது செய்ய முயன்றபோது, பெண் போலீஸார் ஒருவரை அர்னாப் தாக்கியதாக மற்றொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

கைது
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான அர்னாப் கோஸ்வாமி மீது பெண் போலீஸாரை தாக்கிய வழக்கை என்.எம்.ஜோஷி மார்க் போலீஸார் பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்ட நிலையில், பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் அவரைக் கைது செய்ய மும்பை போலீஸார் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்தன.

விசாரணை
எனவே, தன்னுடைய வழக்கறிஞர் பிபி ஜாதவ் மூலம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அர்னாப்பும் அவரது மனைவியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி இல்லாததால், மனுவை வரும் 23-ம் தேதி விசாரிக்கப் பட்டியலிடப்பட்டது... எனவே வரும் 23-ம் தேதி இந்த தம்பதிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற அடுத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications