கொட்டியது பருவமழை.. முதல் நாளே நீரில் தத்தளிக்கும் மும்பை.. பஸ், ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
மும்பையில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
மும்பை: கொட்டி தீர்க்கும் கனமழையால் மும்பை நகரமே தத்தளித்து காணப்படுகிறது.. இதனால் ரயில், பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கேரளாவில் பருவமழை கடந்த 3ம் தேதி தொடங்கியது... எனவே 10ம் தேதி அதாவது இன்றைய தினம் மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
ஆனால், ஒரு நாள் முன்னதாக நேற்றே பருவழை மும்பையில் தொடங்கி விட்டது... தானே, பால்கரில் கனமழை கொட்டி தீர்த்தது..

கனமழை
நேற்று காலை 8 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் கொலாபாவில் 77.4 மி.மீட்டர், சாந்தாகுரூசில் 59.6 மிமீ மழை பெய்ததாக பதிவானது. மும்பையில் பெய்த கனமழையால், ஒரேநாளில் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.. இதனால் மக்கள் தத்தளித்துவிட்டனர்.. அதேபோல, சாலைகள், ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..

மும்பை
இதன் காரணமாக, ரயில், சாலை போக்குவரத்து வெகுவாக பாதித்தது... மும்பையில் சயான் கிங் சர்க்கிள் காந்தி மார்க்கெட், வில்லே பார்லேயில் உள்ள மிலன் சப்வே, காந்திவலி, போரிவலி, மும்ப்ரா, பவாய், ஜூகு உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்து காணப்பட்டன..

வழித்தடங்கள்
சயான், வில்வே பார்லே பகுதியிலும் வெள்ளம் அதிகமாக காணப்பட்டது... பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.. குறிப்பாக, மழையால் மும்பை சத்ரவதி சிவாஜி ரயில் முனையத்தில் இருந்து தானே, நவி, மும்பை செல்லும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.. எனினும் மத்திய ரயில்வே வழித்தடங்களில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

சுரங்கப்பாதை
அதேபோல, மிலன், கார், அந்தேரி, மலாட் போன்ற இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் 2 அடி உயர்த்துக்கு மழைநீர் தேங்கிவிட்டன.. எனவே, அவை உடனடியாக மூடப்பட்டன.. சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால், அவைகளை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.. இந்தசூழலில், மக்கள் யாரும் வீட்டை விட்டு அவசியிம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்ட்டுள்ளனர்..

உத்தவ் தாக்கரே
முன்னதாக, பருவழை தொடங்கியதை அடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது.. இதில், மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்புகொண்டு உத்தவ் தாக்கரே பேசினார்.. மேலும் வெள்ள நீரை வெளியேற்றி, போக்குவரத்தை மறுபடியும் தொடங்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications