தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது
மும்பை: ரிலையன்ஸ் குழும அதிபரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த கொலை மிரட்டல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளைக்க் சொந்தமான Reliance Foundation's Harskisandas Hospital மருத்துவமனைக்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தம்மை தீவிரவாதி என்று கூறிக் கொண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக டிபி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது.

இன்று மட்டும் மருத்துவமனை எண்ணுக்கு 8 முறை இதேபோன்ற கொலை மிரட்டல் தொலைபேசிகள் அழைப்பு வந்திருக்கின்றன. இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டு அருகே வெடிபொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார், தொழிலதிபர் மான்சுக் ஹிரனுக்கு சொந்தமானது. இந்த கார் பிடிபட்ட சில நாட்களில் மான்சுக் ஹிரன், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
ஆனால் மான்சுக் ஹிரனின் காரை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சச்சின் வாஸ், தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போதே இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே நாளில் ஒரே எண்ணுக்கு 8 முறை மிரட்டல் வந்திருப்பதால் போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையைத் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே முகேஷ அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications