புயலுக்கு பஞ்சமில்லை, படகில் துளையிடுவோம், இந்தியாவை முடக்குவோம்.. பந்த்துக்கு எதிராக கங்கனா கவிதை
மும்பை: நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து போராடி வந்த நிலையில் விவசாயிகளுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பாரத் பந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ரயில்கள் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

இந்தியாவை முடக்குவோம்
இந்த போராட்டம் குறித்து ட்விட்டரில் நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகளின் பாரத் பந்துக்கு எதிராக கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் வாருங்கள் இந்தியாவை முடக்குவோம். இந்தப் படகை தாக்கவல்ல புயல்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் அதில் சில துளைகளை உருவாக்க ஒரு கோடாரியைக் கொண்டு வாருங்கள்.

வீதிகளில் இறங்குங்கள்
இங்கே ஒவ்வொரு நாளும் நம்பிக்கை இறக்கிறது. தேசபக்தர்களிடம் இந்த தேசத்தின் ஒரு பகுதியை கேட்கச் சொல்லுங்கள். வீதிகளில் இறங்குங்கள், நீங்களும் எதிர்ப்பு தெரிவியுங்கள், இந்தக் கதையை இத்துடன் மொத்தமாக முடித்துக் கொள்வோம் என ஒரு கவிதையை பகிர்ந்துள்ளார். இதனால் கங்கனாவை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

கங்கனா
விவசாயிகளுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் கங்கனா பேசுவது முதல் முறையல்ல. ஏற்கெனவே வேளாண் சட்டங்கள் நிறைவேறிய போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த போது குடியுரிமைச் சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள்தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்தச் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் தீவிரவாதிகள் என சர்ச்சை கருத்தை கங்கனா வெளியிட்டார்.

போராளி
அது போல் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது போராளி பில்கிஸ் பனோவுக்கு பதில் வேறொரு போராளியின் புகைப்படத்தை பகிர்ந்து, இவர் குடியுரிமைச் சட்டப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 100 ரூபாய் கொடுத்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வார் என கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கங்கனா.












Click it and Unblock the Notifications