மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு.. ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த சிவசேனா
Recommended Video
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று அறிவித்த நிலையில், திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 105 இடங்களில் பாஜகவும் 56 இடங்களில் சிவசேனாவும், 54 இடங்களில் என்சிபியும் 44 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மைக்கு தேவைப்படும் 145 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. கூட்டணி கட்சியான பாஜக- சிவசேனா ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்தது. ஆனால் அது முடியாமல் போனது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் அக்கட்சியோ முடியாது என கூறிவிட்டது.
இதையடுத்து சிவசேனாவை அழைத்த நிலையில் அக்கட்சி ஆதரவு கடிதம் கொடுக்க கால அவகாசம் கேட்டு அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டார். என்சிபியை அழைத்த போது அக்கட்சியும் கால அவகாசம் கோரிய நிலையில் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
6 மாதங்களுக்கு எந்த கட்சியாவது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா இடையே உடன்பாடு எட்டியதாக கூறப்பட்டது. இதையடுத்து அக்கூட்டணியினர் இன்று மாலை 3 மணிக்கு ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக செய்திகள் வெளியாகின.
சிவசேனா செய்தித் தொடர்பாளர் நவாப் அலியும் இதை உறுதி செய்தார். ஆனால், மாலை 4 மணியளவில், ஒரு செய்தி சிவசேனா வட்டாரத்தில் வெளியானது. அதாவது, ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரவில்லை என்பதுதான் அந்த தகவல். காங்கிரஸ், என்.சி.பி ஆகிய கட்சிகளுடன் குறைந்தப்பட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுவதால், ஆட்சியமைக்க சிவசேனா உரிமை கோரவில்லை என கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications