மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்.. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை.. ஆளுநர் அதிரடி!
திடீர் திருப்பமாக தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.
Recommended Video
மும்பை: திடீர் திருப்பமாக தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது.
காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது. இதையடுத்து பெரிய கட்சி என்பதால் பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

ஆதரவு இல்லை
ஆனால் பாஜகவிற்கு சிவசேனா ஆதரவு இல்லை என்பதால், பாஜக எங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. சிவசேனா தொடர்ந்து முதல்வர் பதவி கேட்டதால் இந்த கூட்டணி உடைந்தது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

நினைத்தார்கள்
மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் கடைசி வரை காங்கிரஸ், தேசியவாத கட்சி இரண்டும் சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்கவே இல்லை. இதனால் சிவசேனாவின் திட்டமும் தவிடு பொடியானது.

கூடுதல் அவகாசம்
இதனால்தான் ஆளுநர் பகத் சிங்கிடம் சிவசேனா கூடுதல் அவகாசம் கேட்டது. ஆனால் அவர் கூடுதலாக அவகாசம் கிடையாது என்று கூறிவிட்டார். அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க வரும்படி அழைத்தார். அவர்களுக்கு இரவு 8.30 மணி வரை நேரம் இருக்கிறது.
|
திடீர் திருப்பம்
ஆனால் திடீர் திருப்பமாக தற்போது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் அரசியல் சாசனத்தின்படி மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்த இயலாத நிலை நிலவி வருகிறது.
அதனால் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமைக்க வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications