சின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது?
சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தாலும், முதல்வர் பதவி உத்தவ் தாக்கரேவிற்குத்தான் வழங்கப்படும், ஆதித்யா தாக்கரேவிற்கு வழங்கப்படாது என்று கூறி உள்ளனர்.
Recommended Video
மும்பை: சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தாலும், முதல்வர் பதவி உத்தவ் தாக்கரேவிற்குத்தான் வழங்கப்படும், ஆதித்யா தாக்கரேவிற்கு வழங்கப்படாது என்று கூறி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறிவிட்டது. சிவசேனா ஆதரவு தர மறுத்ததால் பாஜக இந்த முடிவை எடுத்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் இன்று மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

இவர்தான் காரணம்
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜக இடையில் பிரச்சனை வந்ததற்கு காரணமே ஆதித்யா தாக்கரேதான் என்று கூட கூறலாம். அவர்தான் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறை தேர்தலில் நின்றார். அதில் எளிதாக வெற்றியும் பெற்றார்.

முதல்வர் பதவி
இதனால் அவர் தனக்கு முதல்வர் பதவி வேண்டும். இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். இதனால்தான் சிவசேனா மற்றும் பாஜக இடையில் கடுமையான பிரச்சனைகள் உருவானது. கூட்டணியும் முறிந்தது.

இரண்டு கட்சிகள்
தற்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை சிவசேனா எம்எல்ஏக்கள் கடிதத்தை ஆளுனரிடம் அளிக்க உள்ளனர்.

விட்டுக்கொடுத்த காங்கிரஸ்
சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. ஆனால் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே முதல்வர் ஆக போவது இல்லை. உத்தவ் தாக்கரேதான் முதல்வர் பதவியை ஏற்க போகிறார் என்கிறார்கள்.

இல்லை போச்சு
ஆதித்யா தாக்கரே முதல்வராக தேசியவாத காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மிகவும் இளையவர். சரத் பவார் போன்ற பெரிய நபர்கள் அவருக்காக இறங்கி வர முடியாது. உத்தவ் தாக்கரே என்றால் ஓகே. அவருக்கு ஆதரவு தருவோம் என்று கூறி உள்ளனர்.

முடிவு
இதனால் நமக்கு முதல்வர் பதவி வந்தால் போதும். ஆதித்யாவிற்கு ஏதாவது பெரிய அமைச்சரவை பொறுப்பை அளிக்கலாம் என்று சிவசேனா முடிவு செய்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இப்போது எம்எல்ஏ இல்லை. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்று, பின் 6 மாதத்தில் எங்காவது ஒரு தொகுதியில் நின்று விரைவில் எம்எல்ஏ ஆவார் என்று கூறப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications