Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட் தரும் ஷிண்டே.. மும்பையில் மிஸ்ஸிங்! ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் பாஜக.. என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகவுள்ளது. ஆனால் இன்னுமே அங்கு ஆட்சியை அமைக்க முடியாமல் பாஜக கூட்டணி திணறி வருகிறது. அமைச்சரவை குறித்த ஆலோசனை நடந்து வந்த நிலையில், திடீரென ஷிண்டே தனது சொந்த கிராமத்திற்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். இதனால் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் கடந்த வாரம் தேர்தல் நடந்த நிலையில், அதில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதேநேரம் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் நெருங்கும் போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது.

maharashtra assembly election 2024 maharashtra bjp 2024

ஆலோசனை: இந்தச் சூழலில் தான் டெல்லியில் அமித் ஷா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நள்ளிரவு வரை நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார். மகாராஷ்டிராவில் புதிதாக அமையும் அரசில் அதிகாரப் பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனை நடந்துள்ளது.

இந்த கூட்டம் சிறப்பாகவும் பாசிட்டிவாகவுமே இருந்ததாக ஷிண்டே கூறியிருந்தார். இதனால் விரைவில் மகாராஷ்டிரா குழப்பம் முடிவுக்கு வரும் என்றும் புதிய அரசு அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாருக்கும் ட்விஸ்ட் தரும் வகையில், திடீரென ஷிண்டே தனது சொந்த கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் பேச்சுவார்த்தை தொடர முடியாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் இல்லை: ஏக்நாத் ஷிண்டே திடீரென சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றதால், அமைச்சரவை குறித்த விவாதம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவை பகிர்வு தொடர்பாக முக்கிய கூட்டம் நடைபெற இருந்த நிலையில், ஷண்டே ஊருக்குச் சென்றுள்ளதால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு உருவாவதில் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. ஷிண்டே நாளை சனிக்கிழமை தான் மும்பை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், பாஜக மட்டும் தனியாக 132 இடங்களில் வென்றுள்ளது. அங்குத் தனிப்பெரும்பான்மைக்கே 145 இடங்கள் இருந்தால் போதும். இதனால் முதல்வர் பதவி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு தான் என்பது கிட்டதட்ட உறுதியாகவிட்டது. ஷிண்டே முதலில் முதல்வர் பதவியை விட்ட தரத் தயங்கினாலும் பின்னர் ஓகே சொல்லிவிட்டார். செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

ஷிண்டே திட்டம்: துணை முதல்வர் பதவி ஓகே தான் என்றாலும் உள் துறை தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். அப்படி இல்லை என்றால் அவர் தனது மூத்த மகனுக்குத் துணை முதல்வர் பதவியைத் தர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல பாஜகவின் மகாயுதி கூட்டணியில் இருந்த சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. முதல்வர் பதவி கிடைக்காது என்பதால் அமைச்சரவையில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவதில் இரு கூட்டணிக் கட்சிகளும் உறுதியாக இருக்கிறது. பாஜகவை 2 துணை முதல்வர் பதவிகள் மற்றும் அமைச்சரவையில் அதிகபட்சமாக 20 பதவிகளைத் தரத் தயாராக இருப்பதாகச் சொல்லிவிட்டது.

என்ன சிக்கல்: இதில் தான் சிக்கலே நிலவுகிறது. என்சிபி தலா 10 அமைச்சரவை என்பது போலக் கேட்கிறது. ஆனால், அதிக இடங்களில் வென்றுள்ளதால் தங்களுக்கு என்சிபியை காட்டிலும் கூடுதல் அமைச்சர் பதவிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் ஷிண்டே தரப்பு உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாகவே அரசு அமைப்பதில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+