5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்.. சஞ்சய் ராவத் அதிரடி அறிவிப்பு.. என்சிபிக்கு ஓகேவா?
மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார் என்று அந்த கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார் என்று அந்த கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த மூன்று வாரமாக நிலவி வந்த அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அங்கு புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி தற்போது அங்கு நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி கூட்டணி ஆட்சியை கொடுக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடன் அந்த கட்சி கூட்டணி வைக்கிறது. இது தொடர்பாக சிவசேனா மூத்த எம்பி சஞ்சய் ராவத் பேட்டி அளித்துள்ளார்.

சிவசேனா
மூத்த எம்பி சஞ்சய் ராவத் தனது பேட்டியில், மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனா முதல்வர்தான் ஆட்சியில் இருப்பார். இரண்டரை ஆண்டுகள் சிவசேனா முதல்வர் இருப்பார் என்ற செய்தி தவறானது. முதல்வர் இடையில் மாற்றப்பட மாட்டார். நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக பேசி உள்ளோம்.

இரண்டு நாட்கள்
சிவசேனா முதல்வர் இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படுவார். உத்தவ் தாக்கரேதான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.

பாஜக இல்லை
பாஜகவுடன் நாங்கள் இனியும் இணைய முடியாது. அவர்களுக்கு நாங்கள் கொடுத்த அவகாசமும் முடிந்துவிட்டது. ஆளுநரை வைத்து அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்த போதே அவர்களுடனான எங்களின் உறவு முறிந்துவிட்டது.

மிகவும் தாமதம்
பாஜக எங்களுக்கு இந்திரனின் இருக்கையை கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்கள் இப்போது எங்களுடன் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மிகவும் தாமதமாக இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தவறு செய்துவிட்டனர் என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications