இதுதான் அரசியல் முதிர்ச்சி.. எல்லோரின் பார்வையும் ஒருவர் மீதுதான்.. சரத் பவாரின் அடுத்த மூவ் என்ன?
மகாராஷ்டிராவில் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை மீண்டும் ஒருமுறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிரூபித்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிராவில் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை மீண்டும் ஒருமுறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நிரூபித்துள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனாவுடன் நடந்த மோதலால் தற்போது பாஜக அரசு தனது அமைச்சரவையை கலைத்துள்ளது.

காங்கிரஸ் இல்லை
இங்கு சிவசேனா, பாஜகவுடன் எப்படியும் காங்கிரஸ் சேராது. அதனால் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை சீனிலேயே இல்லை. அதனால் பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்காத என்றுதான் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள். பெரிய பதவிகளை கொடுக்க கூட அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். .

இல்லை
இதனால் தேசியவாத தலைவர் சரத் பவார் சிவசேனா அல்லது பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் எல்லோரும் பேசினார்கள். ஆனால் சரத் பவார் மிக கவனமாக யாருக்குமே ஆதரவு அளிக்காமல் தனியாக இருந்தார். நாங்கள் எதிர்கட்சியாகவே இருப்போம் என்று உறுதியாக எந்த ஆசையும் படாமல் வெளிப்படையாக கூறிவிட்டார்.

முதிர்ச்சி
அவரின் அரசியல் முதிர்ச்சி மற்றும் சாணக்கியத்தனம் இரண்டும்தான் இதற்கு காரணம். சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருந்தால், கர்நாடகாவில் மஜதவிற்கு நேர்ந்தது போல ஒரு வருடத்தில் ஆட்சி கவிழந்து இருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்து இருந்தால், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கோபம் கொண்டு இருப்பார்கள். இரண்டு நல்லதல்ல!

என்ன தேர்தல்
மேலும் சரத் பவார் யாருடனும் இணையவில்லை. அதேபோல் சிவசேனா - பாஜக கூட்டணி கண்டிப்பாக உடையும், சிவசேனாவும் விட்டுக்கொடுக்காது, அதனால் எப்படியும் தேர்தல் வரும். அப்போது தேசியவாத காங்கிரஸ் முக்கிய கட்சியாக மாறும். அதனால் இப்போது யாருக்கும் ஆதரவு அளித்து பெயரை கெடுக்க வேண்டும், என்று சரத் பவார் உறுதியாக இருக்கிறார்.

வேகம்
பாஜக , சிவசேனா தலைவர்கள் வீட்டு வாசல்படி வந்து கேட்டும் கூட ஆட்சி அமைக்க சரத் பவார் ஆதரவு தரவில்லை. அதுமட்டுமின்றி, சிவசேனா ஒப்பந்தத்தை பாஜக மதிக்க வேண்டும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறி சரத் பவார் சிவசேனாவை தூண்டிவிட்டார். சீக்கிரம் ஆட்சி அமையுங்கள் என்று துரிதப்படுத்தி, இரண்டு கட்சிகளையும் யோசிக்கவிடாமல் செய்தார். இதுவும் கூட பட்னாவிஸ் பதவி விலகலுக்கு காரணம் என்கிறார்கள்.

எப்படி எதிர்காலம்
பாஜக உடனான மோதல் காரணமாக எதிர்காலத்தில் சிவசேனாவின் வலிமை குறையும். இதனால் கூடுதலாக மாரத்தா வாக்குகள் தேசியவாத காங்கிரஸ் பக்கம் வரும். சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காததன் மூலம், சரத் பவார் அந்த கட்சியை பெரிய பாதாளத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறார். இது தாக்கரேவிற்கும் தெரியும்!

வேடிக்கை
இந்த பிரச்சனையில் ஆர்எஸ்எஸ் வரை பேசியும் சிவசேனா தனது முடிவை மாற்றவில்லை. இன்னொரு தேர்தல் வந்து, அதில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் vs பாஜக vs சிவசேனா என்று மும்முனை போட்டி வந்தால் கண்டிப்பாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியே வெல்லும் என்றும் கூறுகிறார்கள். சரத் பவாரின் திட்டமும் அதுதான் என்கிறார்கள். இவரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications