பாஜகவுடன் உறவை துண்டித்தால் பேசலாம்.. சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டிஷன்.. நவாப் பேட்டி
சிவசேனா பாஜகவுடன் இருக்கும் தொடர்பை துண்டித்து, மத்தியில் கூட்டணியில் இருந்து விலகினால் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்
மும்பை: சிவசேனா பாஜகவுடன் இருக்கும் தொடர்பை துண்டித்து, மத்தியில் கூட்டணியில் இருந்து விலகினால் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் நாளை மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆதரவு கேள்வி
இந்த நிலையில் சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனாவுடன் ஏற்கனவே காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. தேசியவாத காங்கிரசும் சிவசேனா உடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார். அவர், சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது பற்றி யோசித்து முடிவு செய்வோம். ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால், ஆதரவு தருவது குறித்து முடிவு செய்வோம். இதுவரை சிவசேனாவிடம் இருந்து எந்த அழைப்பும் எங்களுக்கு வரவில்லை.

முழு தொடர்பு
சிவசேனா பாஜகவுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்க வேண்டும். பாஜகவுடன் எந்த உறவையும் சிவசேனா கொள்ள கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினால் சிவசேனாவிற்கு ஆதரவு. மத்திய அமைச்சரவையில் இருக்கு சிவசேனா அமைச்சர்கள் எல்லோரும் பதவி விலக வேண்டும்.

ஆலோசனை
நவம்பர் 12ம் தேதி நாங்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம். இந்த முடிவை சிவசேனா எடுக்க வேண்டும். அப்படி செய்தால், சரத் பவார் சிவசேனா உடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வார் என்று நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications