ஓகே சொன்ன மாநில நிர்வாகிகள்.. ரிஸ்க் வேண்டாம்.. எச்சரிக்கும் தேசிய நிர்வாகிகள்.. குழப்பத்தில் சோனியா
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கட்சி ஏற்கனவே கூறிவிட்டது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் இன்று மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார். சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனா
இந்த நிலையில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஓகே என்று சொல்லி இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் உள்ள அசோக் சவான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிவசேனா கூட்டணி நல்லதுதான். வலுவாக இருக்கும் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

தேசிய அளவில்
ஆனால் தேசிய அளவில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், அப்படி செய்வது சரியாகாது என்று கண்டிப்புடன் மறுத்துள்ளனர். இப்போது சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் அது உதவாது. எதிர்காலத்தில் நமக்கான வாக்கு வங்கி குறைந்துவிடும்.

தேசிய அளவில் என்ன நடந்தது?
கர்நாடகாவில் நடந்தது போலதான் மீண்டும் நடக்கும். அங்கு மஜத உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து அமைத்த ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. இப்போதுதான் மகாராஷ்டிராவில் நாம் வளர்ந்து வருகிறோம். அதை கெடுத்துவிட வேண்டாம் என்று தேசிய நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

என்ன முடிவு
இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளார். என்ன செய்வது, மாநில நிர்வாகிகள் சொல்வதை செய்வதா, தேசிய நிர்வாகிகள் சொல்வதை செய்வதா என்று சோனியா குழப்பத்தில் உள்ளார். இன்று மாலைக்குள் அந்த கட்சி முக்கிய முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications