இடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே
மும்பை: இடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை கைவிடுவது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்திய போது கீழ்நீதிமன்றத்தில் 288 வழக்குகளை அரசு தொடர்ந்தது. இந்த வழக்குக்ளை கைவிடுவது என தற்போதைய அரசு முடிவு செய்துள்ளது.

3,000 மராத்தா ஜாதி இளைஞர்கள் மீது இந்த 288 வழக்குகள் போடப்பட்டிருந்தது. அதேபோல் நானார் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டம், மெட்ரோ-3வது திட்டத்துக்கு எதிரான போராட்டம், பீமா கோரேகான் வன்முறை, விவசாயிகள் போராட்டங்கள் ஆகியவை தொடர்பான பல வழக்குகளையும் கைவிட உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்திருக்கிறது.
சிசிடிவி காட்சிகள், நேரடி சாட்சியங்கள் என வலுவான வழக்குகளை மட்டும் நடத்துவது எனவும் அம்மாநில அரசு தீர்மானித்துள்ளதாம். இடஒதுக்கீடு போராட்டத்தின் போது போலீசார், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட 35 வழக்குகளை கைவிடுவது இல்லை எனவும் மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. 370 மராத்தா ஜாதி இளைஞர்கள் மீது இந்த 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications