இன்ச் கூட நகரல! முடங்கிய மும்பை சாலை! தண்ணீர் கூட இல்லாமல் இரவு முழுக்க பேருந்தில் சிக்கிய மாணவர்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று மும்பை- அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பல பள்ளி, கல்லூரி வாகனங்கள் இரவு முழுக்கவே டிராபிக்கில் மாட்டிக்கொண்டன. இதனால் தண்ணீர் கூட இல்லாமல் சுமார் 500+ குழந்தைகள் தவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இப்போது டிராபிக் மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. முன்பு ஓரிரு நகரங்களில் மட்டும் இருந்த டிராபிக் பாதிப்பு இப்போது பெரும்பாலான நகரங்களில் ஏற்படுகிறது. மும்பையும் கூட அப்படி தான் மோசமான டிராபிக் இருக்கும் ஒரு நகரமாக இருக்கிறது.

கடும் போக்குவரத்து
இதற்கிடையே நேற்று மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மும்பை- அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் போக்குவரத்து நெரிசலால் 500க்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பல மணி நேரம் வாகனங்கள் நகர முடியாமல் நின்றதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த பாதிப்பு இன்னுமே கூட முழுமையாகச் சீராகவில்லையாம்.
நேற்று பிற்பகலில் இருந்தே இந்த டிராபிக் நெரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. மாலை அது உச்சத்திற்குப் போய் இருக்கிறது. மாலை 5:30 மணி முதல் புதன்கிழமை அதிகாலை வரை, மும்பை மற்றும் தானே பகுதிகளைச் சேர்ந்த 12 பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த டிராபிக்கில் சிக்கியுள்ளன. அதில் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 5 முதல் 10ஆம் வகுப்பு வரையில் படிக்கும் பள்ளி மாணவர்களும் இருந்துள்ளனர்.
சிக்கிய பள்ளி பேருந்துகள்
அருகே உள்ள விரார் என்ற பகுதிக்குச் சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது இந்த டிராபிக்கில் அந்த பஸ்களும் சிக்கிக் கொண்டன. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல மணி நேரம் மாணவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இரவு நேரமாக ஆகப் பசி, சோர்வு மற்றும் பதற்றம் குழந்தைகளிடையே அதிகரித்துள்ளது. இதனால் இரவுக்கு மேல் நிலைமை மோசமானது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் அருகே இருந்த சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குச் சிக்கித் தவித்த குழந்தைகளுக்குத் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்களை வழங்கினர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அவர்கள் டிராபிக்கை சரி செய்யும் முயற்சியிலும் இறங்கினர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "பசியாலும் சோர்வாலும் மாணவர்கள் அழுதனர். போக்குவரத்து அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் அப்பாவி மாணவர்கள் இதில் சிக்கிக் கொண்டனர்" என்றார்.
I challenge the gov. of Maharashtra Ministers to make a travel from Bhiwandi to Wada. The Mumbai Ahmedabad highway for all the reasons is always with hours of traffic snarls. Should even Industries function in Maharashtra any more? @AjitPawarSpeaks @mieknathshinde @Dev_Fadnavis pic.twitter.com/xSyeAoarJi
— Vedang Dongre (@VedangDongre) October 14, 2025
என்ன காரணம்
அருகே உள்ள தானேவில் உள்ள கோத்புந்தர் நெடுஞ்சாலையில் சாலைப் பணிகள் நடந்துள்ளன. இதனால் அங்கிருந்த கனரக வாகனங்கள் இந்த ரூட்டிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இப்படி திடீரென அதிகரித்த வாகனங்களே டிராபிக் ஜாம் ஏற்படக் காரணமாக இருந்ததாக அந்த சமூக ஆர்வலர் கூறினார். இதுவே மும்பை-அகமதாபாத் சாலையில் டிராபிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போக்குவரத்து நெரிசல் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்டது... இப்போது அதை சரி செய்து வருகிறோம்.. நெரிசல் மெதுவாகக் குறைந்து வருகிறது.. இருப்பினும், வாகனங்கள் மெதுவாகவே நகர்கின்றன" என்று குறிப்பிட்டார்.
இரவு முழுக்க சிக்கிய பேருந்துகள்
மாணவர்களை ஏற்றிச் சென்ற சில பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. அதேநேரம் மற்ற வாகனங்கள் நெரிசலில் தான் சிக்கி மெல்லச் சென்றுள்ளன. இன்று காலை 6 மணிக்கு தான் சில பள்ளி பேருந்துகள் டிராபிக் ஜாமில் இருந்தே தப்பியுள்ளன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு மோசமான திட்டமிடல் மற்றும் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என பெற்றோர்களும் குற்றம் சாட்டினர். அவர்கள் மேலும், "எங்கள் குழந்தைகள் பல மணி நேரம் உதவியின்றி தவித்தனர்.. அங்கே போலீசார் கூட இல்லை.. குழந்தைகளுக்கு என்ன ஆனது என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை" என்றார். மேலும், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications