ஆனந்த் அம்பானி- ராதிகாவுக்கு திருமணம்!.. அழைப்பிதழை திறந்து பார்த்தால்.. அசத்தும் முகேஷ்- நீடா
மும்பை: ஆனந்த் அம்பானி மற்ரும் ராதிகா மெர்சன்டின் திருமண தேதி எப்போது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி கைப்பட எழுதிய பத்திரிகையும் வைரலாகி வருகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். இவருக்கு மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு ஈஷா, ஆகாஷ், ஆனந்த் ஆகிய ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.

ஈஷாவுக்கு திருமணமாகிவிட்டது. அது போல் முதல் மகன் ஆகாஷுக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஸ்லோகா மேத்தா வைர வியாபாரியின் மகன் ஆவார்.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்டுடன் காதல் வயப்பட்டதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் டேட்டிங் செல்வதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கடந்த ஆண்டு வெகு விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இருவருக்கும் திருமணம் 2024 இல் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட்டின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதாவது அவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும். இதுகுறித்து ஒரு அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.
இவர்களது திருமணம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆனந்த் அம்பானி குஜராத் ஜாம்நகரில் தங்கி அம்பானி கிரீன் எனர்ஜி என்ற வளாகம் கட்டும் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் திருமண அழைப்பிதழின் உள் பக்கம் முகேஷும் நீடாவும் கைப்பட எழுதியுள்ளனர். ஜாம்நகர் அம்பானி குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான இடமாகும். அந்த அழைப்பிதழில் குஜராத்தில் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் இடத்தில் எனது மகனுக்கு நடைபெறும் திருமணத்திற்கு அழைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
1997ஆம் ஆண்டு மாபெரும் சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டு அங்கு 1 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் அந்த இடமே பசுமையானதாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட விலங்குகளை ஆனந்த் இங்குதான் வளர்த்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஜாம்நகரில் எங்களுக்கு பசுமையான நினைவுகள் உள்ளன. ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள், வார இறுதியை மகிழ்ச்சியாக்குங்கள். இவ்வாறு நீடாவும் முகேஷும் குறிப்பிட்டுள்ளார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications