மும்பையில் கார் ஷோ ரூமில் தீ விபத்து.. தீயில் கருகிய காஸ்ட்லி கார்கள்! தொழிலாளர்களின் கதி?
மும்பை: மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஷோருமில் திடீரென தீ ஏற்பட்டது.
மும்பை சாக்கி விகார் சாலையில் ஸீ லேண்ட் ஓட்டல் அருகே ஹுண்டாய் கார் நிறுவனத்தின் ஷோரும் உள்ளது. இந்த ஷோருமுக்கு சொந்தமான கார் பழுது பார்க்கும் தொழிற்சாலையும் உள்ளது. இந்த ஆலையில் திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் அறிந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்பு பொருட்கள் உள்ள இடம் என்பதால் புகை மூட்டம் அதிக அளவில் இருக்கிறது.
மேலும் தீ விபத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. ஆனாலும் விலை உயர்ந்த கார்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு மின்கசிவே காரணமாக இருக்கும் நம்பப்படுகிறது.
ஒருபுறம் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் இருந்தாலும் உள்ளே எவரேனும் சிக்கி உள்ளனரா என்ற விவரங்கள் தற்போது தெரியவில்லை. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
4 மாவட்டங்களுக்கு அதி கனமழை.... இதெல்லாம் கைவசம் வைத்துக்கொள்வது அவசியம் மக்களே
அதே சமயம் இந்த தீவிபத்தில் கார் பழுது பார்க்கும் கிடங்கில் இருந்த ரூபாய் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், தளவாடங்கள், உதிரிபாகங்கள் போன்றவை எரிந்துவிட்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர். முழுமையாக தீ அணைக்கப்பட்ட பிறகே உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா என தெரியவரும்.