வாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை
மும்பை: வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான சந்தேகம் களையப்படாவிட்டால் சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கும் அபாயம் ஏற்படுமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தன. மகாராஷ்ட்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கு இரண்டு கட்சிகளும் சேர்ந்த 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றது.

இதனால் அதிர்ச்சியில் இருக்கும் சரத்பவார், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 20வது ஆண்டு விழாவில் அவர் பேசுகையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பல நிபுணர்களிடம் வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டேன்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.வாக்குப்பதிவுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மக்கள் மனதில் சந்தேகம் இருக்கக்கூடாது. தாங்கள் போட்ட ஓட்டு மற்றவருக்கு சென்றுவிட்டது என மக்கள் நினைக்க இடம் தரக்கூடாது.
இப்போது மக்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தேசிய உணர்வை பயன்படுத்தி ஆட்சியை பிடித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் சேரும் என்பதில் உண்மையில்லை. எங்கள் கட்சி தனித்து செயல்படும்" இ்வவாறு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications