அந்த பக்கம் புயல்.. இந்த பக்கம் மழை.. ஓடுபாதையில் சறுக்கிய விமானம்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!
மும்பை: மும்பையில் நிசார்கா புயல் காரணமாக பெரிய அளவில் காற்று வீசிய நிலையில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு வெளியேறியது வைரலாகி உள்ளது.
அரபிக்கடலில் உருவான நிசார்கா புயல் தற்போது மகாராஷ்டிராவை புரட்டி போட்டுள்ளது. மும்பைக்கு அருகே இந்த புயல் கரையை கடந்தது. அதி தீவிர புயலான இது கரையை கடக்கும் போது வலுவிழந்தது.
புயல் கரையை கடக்கும் 90 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மும்பையில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

மும்பை விமான நிலையம்
மும்பையில் நிசார்கா புயல் காரணமாக பெரிய அளவில் காற்று வீசிய நிலையில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு வெளியேறியது வைரலாகி உள்ளது. மும்பை சத்ரபதி மகாராஜ் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று மதியம் 4.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்துக்கு உள்ளான விமானம் FedEx நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆகும்.

என்ன ஆனது
FedEx உலகின் முன்னணி பார்சல் சர்வீஸ் விமான நிறுவனம் ஆகும். இந்த விமானம் சரக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரில் இருந்து மும்பை நோக்கி வந்து இருக்கிறது. பிரபல எம்டி -11 விமானம் ஆகும் இது. FedEx விமானம் எண் 5033 சரியாக புயல் வீசும் போது மும்பைக்கு அருகே வந்துள்ளது. அப்போது ஓடுபாதை முழுக்க தண்ணீர் இருந்துள்ளது.
|
அதிக காற்று வீசியது
அதேபோல் அங்கு பெரிய அளவில் காற்றும் வீசிக்கொண்டு இருந்தது. இதனால் விமானம் தரையிறங்கும் போதே தள்ளாடிக்கொண்டே இறங்கியது. அதிகமாக காற்று வீசிய நிலையில் விமானம் லேசாக ஆடிக்கொண்டே இறங்கியது. கடைசியில் ஓடுபாதையில் இறங்கிய விமானம் சறுக்கியபடி ஓடுபாதையை விட்டு வெளியே சென்றது. பாதையில் இருந்த நீர் காரணமாக விமானம் வெளியே சென்றது.

யாருக்கு ஆபத்து இல்லை
அதன்பின் விமானி சுதாரித்து விமானத்தை ஓடுபாதைக்கு வெளியே புல் தரையில் நிறுத்தினார். ஆனால் இந்த விபத்தில் அந்த விமானம் சேதம் அடையவில்லை. வேறு விமானம் எதுவும் சேதம் அடையவில்லை. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. மும்பையில் தற்காலிகமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications