அவர்களை எல்லாம் யாரும் கொல்லவில்லை.. இறந்துவிட்டனர்.. ராகுல் காந்தியின் பரபர டிவிட்!
சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்திருந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video

மும்பை: சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்திருந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில், இரண்டு நாட்களுக்கு முன் மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 22 பேருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
13 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
|
ராகுல் டிவிட்
இந்த தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டில், ''யாரும் கொல்லப்படவில்லை.. ஹரேன் பாண்டியா, துளசிராம் பிரஜாபதி, நீதிபதி லோயா, பிரகாஷ் தம்பரி, ஸ்ரீகாந்த் கண்டேல்கர், கவ்ஸர் பி, சொராபுதீன் ஷேக்.. இவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள், கொல்லப்படவில்லை'' என்று டிவிட் செய்து இருந்தார்.

வைரல்
இவரின் இந்த டிவிட் பெரிய வைரல் ஆனது. இந்த டிவிட் 13 தடவைக்கும் அதிகமாக ரீ-டிவிட் செய்யப்பட்டது. அதேபோல் இந்த டிவிட்டிற்கு எதிராகவும் நிறைய பேர் கருத்து தெரிவித்தனர்.
|
யார்
இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இவர் ''யாரும் கொலை செய்யவில்லை, 8000 சீக்கியர்கள், இலங்கையில் 1,40,000 அப்பாவி தமிழர்களை யாரும் கொலை செய்யவில்லை, அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.
|
கொலை செய்யவில்லை
அதேபோல் இவர் ''காஷ்மீர் பண்டீட்களின் நிலை என்ன, போபால் விஷ வாயு வெடிப்பு, 1984 சீக்கிய கலவரம்.. இதெல்லாம் [பெரும் கொலைகள் '' என்று கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications