Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்எல்ஏ, எம்பிக்களுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடு போடுங்க.. மக்கள் தொகையை குறைக்க அஜித் பவார் ஐடியா

Subscribe to Oneindia Tamil

மும்பை: நமது நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏக்கள் எம்.பிக்க்ளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மகராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியாவும் சீனாவும் உள்ளது. சீனா மக்கள் தொகை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், அண்மையில் உலக மக்கள் தொகை நிலை - 2023 அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியது.

இந்த அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியே 86 லட்சம் ஆகும். சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 57 லட்சம் ஆகும். இதன் மூலம் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்திற்கு இந்தியா முன்னேறியது. இந்தியாவின் மக்கள் தொகை குறித்த அறிக்கையை வெளியிட்ட பிறகு ஐநா சபையின் மக்கள் தொகை நிதியம் இந்தியா அமைப்பின் பிரதிநிதி ஆண்டிரியா வோஜ்னர் கூறியதாவது:-

 People who have more than two children should not be given any concessions- Ajith Pawar

"இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி என்பது 140 கோடி வாய்ப்புகளாக பார்க்க வேண்டும். இந்தியாவில் 15-24 வயது இளைஞர்கள் எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம் ஆகும். இது மிகப்பெரிய இளைஞர்களின் கூட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியாவைக் காட்டுவதாக கூறினார். இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித்தலைவரும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அஜித் பவார், மக்கள் தொகையை கட்டுப்படுத்த யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து அஜித் பவார் கூறும் போது, சுதந்திரத்தின் போது நமது நாட்டில் 35 கோடி மக்கள் தொகை இருந்ததாக எனது தாத்தா என்னிடம் கூறுவார். ஆனால் இப்போது மக்கள் தொகை 142 கோடியை எட்டியுள்ளது.

இதற்கு நாம் எல்லாரும் தான் பொறுப்பு. நாடு, மாநிலம், மாவட்டம், பிராந்தியத்தின் நலனுக்காக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை அனைவரும் நிறுத்த வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த சமயத்தில் நாங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோருக்கு மூன்று குழந்தைகள் மேல் இருந்தால் அவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதனால் நாங்கள் அச்சம் அடைந்தோம். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருபது நமக்கு சாபமாகவே இருக்கும். எனவே, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு இதேபோன்ற ஒரு முடிவை ஏன் எடுக்கக் கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள்.

இது எங்கள் கைகளில் இல்லை மத்திய அரசின் கைகளில் உள்ளது என்று நான் தெரிவித்தேன். மத்திய அரசு இது போன்ற ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். சலுகைகள் மறுக்கப்பட்டால் மக்களுக்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் எந்த சலுகையும் கொடுக்கக்கூடாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+