88 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மாயம் ஆனதாக வெளியான தகவல்.. ரிசர்வ் வங்கி கொடுத்த பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் அச்சகத்தில் இருந்து புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களில் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணம் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணமல் போனதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

நமது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் அச்சம், பெங்களூரில் உள்ள பார்திய ரிசர்வ் வங்கி முத்ரைன் லிமிடெட் உள்ளிட மூன்று அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் பேரில் அச்சடிக்கப்படும் இந்த பணத்தாள்கள் பிறகு ரிசர்வ் வங்கி கணக்கிற்கு கொண்டு வரப்பட்டு புழக்கத்தில் விடப்படும்.

RBI dismissed a report that claimed Rs 88,032.5 crore were missing from the Bank record

அந்த வகையில், நாசிக்கில் உள்ள அச்சகத்தில் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 தாள்களில் 375.450 மில்லியன் தாள்கள் காணமால் போனதாக பரபரப்பு புகார் எழுந்தது. அதாவது அச்சடிக்கப்பட்ட பணத்திற்கும் ரிசர்வ் வங்கியின் கணக்கிற்கும் வந்த பணத்திற்கும் பெரும் தொகை வேறுபாடு இருந்ததாக ஆர்.டிஐ சட்டத்தின் கூறப்பட்டு இருந்தது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 500 ரூபாய் நோட்டுகளின் நிலை குறித்து மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரம் கேட்டு இருந்தார்.

அதில், நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் அச்சகத்தில் இருந்து 375.450 மில்லியன் தாள்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் ஆனால் ரிசர்வ் வங்கிக்கு 345.000 மில்லியன் 500 ரூபாய் தாள்கள் மட்டுமே ஏப்ரல் 2015 மற்றும் டிசம்பர் 2016 இடைப்பட்ட காலத்தில் கிடைத்ததாகவும் கூறப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் 88 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் காணமால் போனதாக பரபரப்பாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், ரூபாய் நோட்டுக்கள் காணாமல் போனதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அச்சகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தவறான தகவல்களின் அடிப்படையில் அறிக்கைகள் உள்ளதாகவும் அச்சகங்களில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படும் அனைத்து ரூபாய் நோட்டுக்களும் சரியாக கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி வெளியிடும் தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அச்சகங்களில் அச்சடிக்கப்படும் பணம் மற்றும் அவற்றின் விநியோகத்தை கண்காணிப்பது, பிரித்து வழங்குதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வலுவான அமைப்பை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+