Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்வதேச சதி.." சைஃப் அலி கான் மீதான தாக்குதலில் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் திடுக் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், மும்பை நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்த மும்பை நீதிமன்றம், இதில் சர்வதேச சரி இருக்கலாம் என்பது போல கருத்து கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 16ம் அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டார். மர்ம நபர் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார்.

saif ali khan bollywood mumbai

தாக்குதல்:

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. போலீசார் விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையின் போது மும்பை நீதிமன்றம் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது கைதான நபர் வங்கதேசத்தை சேர்ந்தவராக இருப்பதால், இதில் சர்வதேச சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், கத்தியால் குத்திய நபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது.

சர்வதேச சதி:

இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் வங்கதேச குடிமகன். இதில் சர்வதேச சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது. எனவே, விசாரணை அதிகாரிக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். அந்த நபரை 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சைஃப் அலிகான் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷரீபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று பிற்பகல் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர்.

போலீஸ் தரப்பு வழக்கறஞர்:

போலீசார் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, நடிகரை தாக்கி காயப்படுத்தி இருக்கிறார். மேலும், இருவர் இதில் காயமடைந்துள்ளனர். இதனால் சைஃப் அலி கான் படுகாயம் அடைந்துள்ளார். அந்த நபர் எப்படி வீட்டுற்குள் நுழைந்தார்.. இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை நாம் விசாரிக்க வேண்டும். மேலும், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்.. அவர் எப்படி நாட்டுக்குள் நுழைந்தார் என்பதும் முக்கியம். இதனால் விசாரணைக்கு எங்களுக்கு 14 நாள் காவல் தேவை” என்று வாதிட்டார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர்:

இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் மும்பையில் வசிக்கும் இந்திய குடிமகன் என்றும் வாதிட்டார். அவர் மேலும் கூறுகையில், "சைஃப் அலி கானுக்கு இதில் தொடர்பு இருப்பதால் இது தேவையில்லாமல் பரபரப்பான விஷயமாக மாற்றப்படுகிறது. இல்லையெனில், இது ஒரு சாதாரண வழக்காக கருதப்பட்டிருக்கும். காவலில் எடுக்க தெளிவாக காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது இதற்கு முன்பு எந்தவொரு குற்ற பின்னணியும் இல்லை.. அவர் பலிகடா ஆக்கப்படுகிறார்" என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை நீதிமன்ற நீதிபதி, "விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தற்போது கைதாயிருக்கிறார். எனவே, போலீசார் தாரளமாக விசாரணைக்கு கோரலாம். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் நியமற்றது போலவே தெரிகிறது. இதில் சர்வதேச சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது" என்ற நீதிபதிகள் அந்த நபரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+