டூல்கிட்.. வக்கீல் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய போலீஸ் தீவிரம்.. தடை கோரி மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு
மும்பை: டூல்கிட் தொடர்பான வழக்கில், வழக்கறிஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய டெல்லி காவல்துறை முயலும் நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரெட்டா துன்பெர்க் பகிர்ந்து கொண்ட ஆன்லைன் ஆவணம், அதாவது "டூல்கிட்" எடிட் செய்யப்பட்டு திஷா ரவி, நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் போன்றோர் ஷேர் செய்ததாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சர்ச் வாரண்ட்டுடன், டெல்லி போலீசார் மும்பையிலுள்ள நிகிதா வீட்டுக்கு சென்று ரெய்டு நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு நிகிதா இல்லை என்பதால் அவரை கைது செய்ய முடியவில்லை. முன்னதாக பெங்களூரில், திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான், டெல்லி காவல்துறை தனக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதால், தனக்கு கைது நடவடிக்கையிலிருந்து 4 வாரங்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி நிகிதா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications