ஒரே ஒரு கடனை அடைக்கலை.. அதுக்காக மல்லையாவை திருடன்னு சொன்னா எப்படி.. கத்காரி
Recommended Video

மும்பை: விஜய் மல்லையா ஒரு கடனை அடைக்கவில்லை. இதற்காக அவரை திருடன் என்று முத்திரை குத்துவது நியாயமானதல்ல என்று மத்திய அமைச்சர் நிதின் கத்காரி கூறியுள்ளார். நாற்பது வருடமாக அவர் கடன்களை எல்லாம் சரிவர அடைத்து வந்தவர் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் கத்காரி கூறியுள்ளார்.
அதேசமயம், தனக்கும் விஜய் மல்லையாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கத்காரி விளக்கியுள்ளார். விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ. 9000 கோடி கடன் வாங்கியுள்ளார். திருப்பிச் செலுத்தாத நிலையில் லண்டன் போய் விட்டார். தற்போது அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கத்காரி பேசகையில், கடந்த 40 வருடமாக விஜய் மல்லையா தான் வாங்கிய கடன்களை முறையாக அடைத்துள்ளார். விமானத்துறைக்குள் நுழைந்ததும்தான் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். இதனால் கட்ட முடியாமல் போயுள்ளது. இதற்காக அவர் திருடன் ஆகி விடுவாரா.?
50 வருடம் வாங்கிய கடனை எல்லாம் முறையாக அடைக்கும் ஒருவர், ஒரு கடனை மட்டும் அடைக்காமல் போகும்போது அவரை திருடன் என்று கூறுவது நியாயமானதாக இல்லை.
மகாராஷ்டிர அரசுக்குச் சொந்தமான சிகாம் நிறுவனம் விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்திருந்தது. 40 வருடங்களுக்கு முன்பு இது கொடுக்கப்பட்டது. அதை அவர் முறையாக கட்டியுள்ளார். வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத்தான் செய்யும். ஒருவர் கீழே விழும்போது மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும், ஆதரவாக இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் ரிஸ்க் அதிகம் உண்டு. அது வங்கியாக இருந்தாலும் சரி, இன்சூரன்ஸ் ஆக இருந்தாலும் சரி, ஏற்றத் தாழ்வு வரும். ஆனால் அதில் நாம் செய்யும் தவறுகளை வைத்து நமக்கான சான்றிதழாக அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கத்காரி கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications