Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தன் டாடா மறைவுக்கு பின்.. அவரது இளம் நண்பர் சாந்தனு நாயுடு இப்போது என்ன செய்கிறார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

மும்பை: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு கடைசிக் காலங்களில் நெருங்கிய நண்பராகவும் மேனேஜராகவும் இருந்தவர் சாந்தனு நாயுடு. டாடா மறைந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது சாந்தனு நாயுடு என்ன செய்து கொண்டு இருக்கிறார். அவரது வருங்கால திட்டங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் உள்ள முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்று டாடா குழுமம். உப்பு முதல் அதிநவீன சொகுசு கார் வரை என எல்லாவற்றிலும் டாடா குழுமத்தின் தயாரிப்புகள் நிச்சயம் இருக்கும்.

ratan tata mumbai tata

டாடா குழுமத்தை இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியமாக மாற்றுவதில் ரத்தன் டாடாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அவர் டாடா குழுமத்தின் தலைமை பதவிக்கு வந்த பிறகு தான் அது பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு காரணமாக பிஸ்னஸில் இருந்து விலகியே இருந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த அக். 9ம் தேதி ரத்தன் டாடா திடீரென காலமானார். அவருக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பலரும் இரங்கலும் அஞ்சலியும் செலுத்தினர்.

இதற்கிடையே ரத்தன் டாடாவின் நண்பரும் மேனேஜருமாக இருந்த சாந்தனு நாயுடு இப்போது என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு அவர் தனது வாழ்க்கையில் இப்போது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சாந்தனு நாயுடு தனது புக்கீஸை பிராஜக்ட்டை இப்போது விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார். புக்கீஸ் என்பது மக்களிடையே மீண்டும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டு வரும் ஒரு திட்டமாகும்.

மும்பையில் முதலில் இந்த புக்கீஸ் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இதற்கு புனே மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் அடுத்த கட்டமாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை டிச. 8ம் தேதி ஜெய்ப்பூரில் இந்த புக்கீஸ் நிகழ்வு நடைபெறும் என்றும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் சாந்தனு நாயுடு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில், "ஜெய்ப்பூருக்கான நேரம் இது.. ஞாயிற்றுக்கிழமை 8ஆம் தேதி ஜெய்ப்பூர் புக்கீஸில் நாம் சந்திக்கலாம். உங்களைச் சந்திக்க உற்சாகமாகக் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். சாந்தனு நாயுடு தனது புக்கீஸ் நிகழ்வை அடுத்து டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட நகரங்களிலும் நடத்த விரும்புகிறார். முன்னதாக அவர் கடந்த மாதம் தான் பெங்களூரில் புக்கீஸ் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

முன்னதாக தனது புக்கீஸ் நிகழ்ச்சி ஏன் முக்கியமானது என்பது குறித்து அவர், "வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் மக்களிடையே கொண்டு வருவதே புக்கீஸின் நோக்கம். புத்தகம் படிப்பது நமக்குப் புதுவித அனுபவத்தைத் தருகிறது. ஒரு விஷயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதில் இது நமக்கு உதவுகிறது. ஏனென்றால் இப்போது நாம் குறுகிய ரீல்ஸ்களை மட்டுமே பார்க்கிறோம். முழு வீடியோவை பார்க்கும் அளவுக்குக் கூட நம்மிடம் பொறுமை இல்லை" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடா இருந்தவரை எப்போதும் சாந்தனு நாயுடு அவருடன் தான் இருந்து வந்தார். நாயுடுவின் வெளிநாட்டுப் படிப்புக்கான கடனை கூட டாடா தான் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடுவின் பெயரும் உயிலில் இடம்பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+