ஒன் பை டூ..மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து ஓவர்! நாளை பேசி முடிக்கும் அமித் ஷா! டெல்லிக்கு பறக்கும் தலைகள்
மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் நிறைவடைந்து பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த பாஜக தரப்பில் முதலமைச்சர் பதவியேற்பார் எனவும், இரு துணை முதலமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் நாளை சந்திக்கவுள்ளனர்.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுறது.

இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. இதில் பாஜக மட்டுமே 132 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் காய் நகர்த்தி வருகிறார். அதே நேரத்தில் சிவசேனா நிர்வாகிகளோ ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக வேண்டுமென விரும்பினர்.
இதனால் மகா யுதி கூட்டணியில் திடீர் பிளவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஏக்நாத் ஷிண்டே. அப்போது பேசிய அவர்," பிரதமர் நரேந்திர மோடி நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என என்னிடம் கூறினார். அப்போது நான், இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது; அதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி தொடர்பாக பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். மகாராஷ்டிரா முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன்" என கூறியிருந்தார். இதன் மூலம் பாஜக முடிவுக்கு அவர் பச்சைக் கொடி காட்டியிருப்பதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த பாஜக தரப்பில் முதலமைச்சர் பதவியேற்பார் எனவும், இரு துணை முதலமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் நாளை சந்திக்கவுள்ளனர். அதற்கு பிறகு முதலமைச்சர் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.. குறிப்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் துணை முதலமைச்சர்களாக பதவியேற்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications