மருமகள் செய்த தப்பு.. இருந்தாலும் மாமனாருக்கு இவ்வளவு டென்ஷன் கூடாது.. உறைந்துபோன தானே
மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனாரிடம் விசாரணை நடக்கிறது
மும்பை: மாமனாருக்கு வந்த ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து மருமகளை தாறுமாறாக சுட்டு தள்ளிவிட்டார்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மகாராஷ்டிர மாநிலமே அதிர்ந்து போயுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தானேவை அடுத்த ரபோடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாத் பாண்டுரங் பாட்டீல். இவருக்கு 76 வயதாகிறது. இவரது மருமகளுக்கு 42 வயதாகிறது.
வழக்கமாக இவருக்கு காலை டிபன் மற்றும் டீ இரண்டையும் மருமகள் தருவது வழக்கம்.. ஆனால் நேற்று காலை, டிபனுடன் சேர்த்து இவருக்கு டீ தரவில்லையாம்..

மாமனார்
அதனால் மருமகள் மீது மாமனாருக்கு கோபம் வந்துவிட்டது.. உடனே துப்பாக்கியை எடுத்து தன்னுடைய மருமகளை சுட்டு தள்ளிவிட்டார்.. இதில், அந்த பெண்ணின் அடி வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. இதை பார்த்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்து, மருமகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

துப்பாக்கி சூடு
நடந்த சம்பவம் குறித்து காசிநாத் பாண்டுரங்கின், இன்னொரு மருமகள் போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில், காசிநாத் பாண்டுரங்கன் மீது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.. காரணம், இந்த துப்பாக்கி சூட்டிற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்...

பெண் சீரியஸ்
இப்போது அந்த மருமகள் சீரியஸாக இருக்கிறாராம்.. டாக்டர்கள் தீவிர சிகிச்சை தந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீஸ் உயரதிகாரி சொல்லும்போது, "மருமகள் டீயுடன் காலை உணவு கொடுக்காத காரணத்தால் கோபமடைந்த மாமனார், மருமகளை சுட்டதாகத் தெரிகிறது... துப்பாக்கியால் சுட்டதால் 42 வயதான அந்தப் பெண்ணுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது... அதனால் அந்தப் பெண் தானேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றார்.

அதிர்ச்சி
உணவு வழங்காத காரணத்தினால் மருமகளையும், மகனையும் கத்தியால் தாக்கிய சம்பவம் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது.. ஆனால், டிபனில் டீ தராத காரணத்திற்காக, துப்பாக்கியை எடுத்து ஆளையே காலி செய்ய நினைத்த சம்பவம் இப்போதுதான் முதல்முறையாக நடந்துள்ளது.. மகாராஷ்டிரா மாநில மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications