Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொண்டாட்டி ரூமில் சிரிப்பு சத்தம்.. பதறி ஓடிய புருஷன்.. கடைசியில் பார்த்தால், ஓ காட்.. இவரல்லவோ மனைவி

கள்ளக்காதலனுக்காக கணவனுக்கு விஷஊசி போட்டு கொலை செய்துவிட்டார் மனைவி

Subscribe to Oneindia Tamil

மும்பை: கள்ளக்காதல் பித்து தலைக்கேறிவிட, கடைசியில் தன் கணவரை கோமா நிலைமைக்கே கொண்டுபோய்விட்டு விட்டார் அவரது தர்மபத்தினி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் பகுதியை சேர்ந்தவர் கேசவரா தேஷ்முக்... மனைவி பெயர் சுகாசினி... இவர் ஒரு டாக்டர்.. அங்குள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்..

சுகாசினி

சுகாசினி

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்... டாக்டராக இருந்தாலும், சுகாசினியின் நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இந்த விஷயம் கணவருக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட, மனைவிமீது எப்போதுமே சந்தேகப்பார்வையை வீசும்படி ஆகிவிட்டது.. இதனால் குடும்பத்தில் நிறைய முறை தகராறு வெடித்துள்ளது.. சில சமயம், திடீரென ஆஸ்பத்திரிக்கும் நேரிலேயே சென்று மனைவியின் நடத்தையை கவனிப்பாராம்..

 பாய் பிரண்ட்

பாய் பிரண்ட்

அப்படித்தான், சம்பவத்தன்றும் கேசவரா தேஷ்முக், தன் மனைவியை காண அவரது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்... அப்போது மனைவியின் ஆண் நண்பரான அருண் காண்டேகர் என்பவர் மனைவியின் ரூமில் இருந்துள்ளார்.. அவருடன் சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தார்.. 2 பேரும் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்த தேஷ்முக்குக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. அதனால், நேரடியாகவே இருவரிடமும் சென்று இதை பற்றி கேட்டுள்ளார்.. அங்கேயே தகராறும் செய்துள்ளார்.

பாத்ரூம்

பாத்ரூம்

இதனால் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.. இருந்தாலும் அது ஆஸ்பத்திரி என்பதால், கணவருடன் தனியே பேச வேண்டும் என்று சொல்லி, பக்கத்தில் இருந்த பாத்ரூம் அருகே தேஷ்முக்கை சுகாசினி அழைத்து சென்றுள்ளார்... பின்னாடியே அருணும் சென்றிருக்கிறார்.. தேஷ்முக்குக்கு கள்ளக்காதல் ஜோடி என்னன்னவோ சொல்லி சமாளிக்க பார்த்தது.. ஆனால், தேஷ்முக் ஆத்திரம் குறையாமல் இருந்ததால், அதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று எண்ணிய சுகாசினி, அருணுடன் சேர்ந்து தேஷ்முக்குக்கு விஷ ஊசி செலுத்திவிட்டார்..

 கோமா சீரியஸ்

கோமா சீரியஸ்

ஊசி போட்டதுமே, தேஷ்முக் கோமா நிலைக்கு போய்விட்டார்.. அதே ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டுவிட, சிகிச்சையும் தரப்பட்டது.. இப்படியே 33 நாட்களுக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. ஆனாலும், 34வது நாளில் கோமாவிலேயே தேஷ்முக் உயிர் பிரிந்துவிட்டது.. அப்பா இறந்ததுமே, கதறி கதறி அழுதுள்ளார் அவரது மகன்.. அப்பா இறந்ததற்கு அம்மாதான் காரணம் என்பதால், நேரடியாக அவரிடம் சண்டைக்கு போயுள்ளார்..

எஸ்கேப்

எஸ்கேப்

அதுமட்டுமல்ல, அப்பா இறப்புக்கு காரணம் தன்னுடைய அம்மாதான் என்று போலீசிலும் புகார் அளித்துள்ளார்.. பிறகு இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.. ஆனால், மகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றுவிட்டான் என்று தெரிந்ததுமே, சுகாசினி எஸ்கேப் ஆகிவிட்டார்.. ஆண் நண்பர் அருணும் தலைமறைவாகி விட்டார்.. இப்போது இவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

பரிதாபமாக உயிரிழந்த தேஷ்முக் குறித்து மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.. கணவர் தேஷ்முக்குக்கு சுகாசினி இரண்டாவது மனைவியாம்.. முதல் மனைவி இருக்கும்போதே, இரண்டாவதாக சுஹாசினியை திருமணம் செய்துகொண்டார்.. இந்த திருமணம் விஷயம் தெரிந்தும், தம்பதி இருவரும் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதும் முதல் மனைவிக்கு தெரிந்துவிட்டது.. இதனால், கொந்தளித்து போன முதல்மனைவி, தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.. பிறகு போலீசுக்கும் சென்று புகார் தந்துள்ளார்.. அவரை தற்கொலைக்கு தூண்டியதன்பேரில் போலீசாரும், தேஷ்முக்கை கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. 6 வருடம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.. அவ்வளவையும் சுகாசினி மீதுள்ள பிரியத்தால் பொறுத்து கொண்டாராம் தேஷ்முக்.. இந்த 6 வருட இடைவெளியில்தான், சுஹாசினியின் பாதை மாறியுள்ளதாக சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+