யோகா உலக அமைதியை.. மன அமைதியை ஏற்படுத்தும்.. மைசூரில் யோகா செய்த பிரதமர் மோடி பேச்சு!
மைசூர்: யோகா மூலம் உலகம் முழுக்க அமைதி பரவும், சுய அமைதியை உணர்ந்த மக்கள் மூலம் உலகம் முழுக்க அமைதியை பரப்ப முடியும் என்று பிரதமர் மோடி
Recommended Video
யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மொத்தம் 15 ஆயிரம் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இன்று 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
மைசூர் யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யோகா என்பது நாம் வாழ்வில் ஒரு அங்கம், அது வாழ்க்கை முறை. நம் உலகமே நமது உடலில் இருந்தும் மனதில் இருந்தும்தான் துவங்குகிறது. இந்த உலகம் நம்மிடம் இருந்துதான் துவங்குகிறது. யோகா நம்முடைய உள்ளார்ந்த திறனை உணர உதவி செய்கிறது.

ஆன்ம சக்தி
நமது ஆன்ம சக்தியை உணர்ந்து கொள்ள யோகா கருவியாக இருக்கிறது. யோகா மூலம் உலகம் முழுக்க அமைதி பரவும். சுய அமைதியை உணர்ந்த மக்கள் மூலம் உலகம் முழுக்க அமைதியை பரப்ப முடியும். இந்த யோகா தினம் மக்களையும், உலக நாடுகளையும் இணைக்கும்.

பிரச்சனைகள் தீரும்
யோகா மூலம் நம்முடைய, உலக மக்களுடைய பிரச்சனைகள் தீரும். உலக அமைதியை நிலைநாட்ட யோகா ஒரு கருவியாக உள்ளது. உலகம் முழுக்க மக்களின் ஆரோக்கியத்திற்கு யோகா ஒரு கருவியாக உள்ளது. யோகா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு பரவிவிட்டது.

யோகா
கொரோனா காலத்திலும் கூட நம்மை வழிநடத்த யோகா காரணமாக இருந்தது. இந்த வருட யோகாவிற்கான தீம் மனித நேயம் ஆகும். உலக நாடுகளுக்கும், ஐநாவிற்கு இந்த நாளில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி. உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை வழங்கும் யோகாவை எல்லோரும் பின்பற்ற வேண்டும், என்று பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications