மைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை!
Recommended Video
மைசூர்: உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
'மைசூரு தசரா எஸ்டொந்து சுந்தரா' அதாவது, மைசூரு தசரா, என்ன ஒரு அழகு, என்ற ஒரு வாக்கியம் கர்நாடகாவில் ரொம்பவே புகழ்பெற்றது. அந்த அளவிற்கு கர்நாடகா மட்டுமில்லாது தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட மைசூரு தசரா விழாவை நேரில் காணுவதற்கு பக்தர்கள் செல்வர்.

வெளிநாட்டு பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்கூட, திரளாக இதில் பங்கேற்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்வார்கள் என்பது மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்.
மைசூரு தசரா நவராத்திரி விழா செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வான அம்பாரி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக மதியம் 2 மணி 15 நிமிடங்களுக்கு நந்தித்வஜா பூஜையை முதல்வர் எடியூரப்பா பலராமா கேட் பகுதியில் வைத்து நடத்தினார். இதையடுத்து தசரா பேரணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
750 கிலோ எடை கொண்ட அம்பாரியில் சாமுண்டேஸ்வரி அம்மனின் சிலை வைக்கப்பட்டு, அர்ஜுனா என்ற யானை அதை சுமந்து வர அம்மனுக்கு மலர்களை தூவி வணங்கினார் முதல்வர் எடியூரப்பா. எட்டாவது முறையாக அர்ஜுனா என்ற இந்த யானைக்கு அம்பாரியை, சுமக்கக் கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது.
அம்மன் சிலையை சுமந்தபடி அர்ஜூனா யானை முன் செல்ல, அதன் பின்னால் பல்வேறு மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் அரசுத் துறையை சேர்ந்த 38 அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. இந்த ஊர்வலம் நகரின் பல்வேறு வழியாகச் சென்று நிறைவாக 'பண்ணிமண்டபம்' பகுதியை அடையும்.
இரவு 7 மணியளவில் பண்ணிமண்டபம் மைதானத்தில் ஆளுநர் வஜுபாய் வாலாவிற்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்குவார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 32 ஆயிரம் மக்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் ஒன்றுதிரண்டுள்ள, உள்ள நிலையில் மைசூர் நகரில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications