“இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்”.. 4 மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
நாகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 மாவட்டங்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகை மற்றும் திருவாரூருக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று நாகை மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற பள்ளியில் காலைச் சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். மாவட்ட கலெக்டர்கள் ஜானிடாம் வர்க்கீஸ் (நாகை), தீபக் ஜேக்கப் (தஞ்சை), சாருஸ்ரீ (திருவாரூர்), மகாபாரதி (மயிலாடுதுறை) ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எவ வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ், டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஏடிஜிபி அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள், செய்ய வேண்டிய பணிகள், செயல்படுத்தப்பட்ட அரசின் நலத்திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்துப் பேசினர். தற்போது இந்த மாவட்டங்களில் செய்யப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் இடம் எடுத்துரைத்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "முன்னதாக வேலூரில் இதே போல துறை ரீதியிலான செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தி நான் எந்த கேள்விகளை கேட்டிருந்தேனோ அதனை நீங்கள் கேட்டு, அதற்கான உரிய நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். இதுவே நான் எதிர்பார்க்கும் மாற்றம். இதுவே இந்த திட்டத்தின் வெற்றி.
இந்த மாவட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் , மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அதனை ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தின் சராசரி வேலைநாட்களை உயர்த்தவேண்டும். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் வேளாண் சாகுபடி என்பது குறைந்து வருகிறது. எந்தெந்த பகுதிகளில் வேளாண் சாகுபடி குறைந்து வருகிறதோ அதனை கண்டறிந்து அந்த பகுதிகளில் வேளாண் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை மரங்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. அதனையும் ஆட்சியர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தியை மட்டுமல்லாது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் துறை சார்ந்த தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல், தொழில் சார்ந்த வளர்ச்சி திட்டங்களையும் ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டும். தங்கள் மாவட்டங்களுக்கு என தனிப்பட்ட திட்டங்களை கண்டறிந்து அதனை அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக முடித்து தரவேண்டும். அரசு சான்றிதழ் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மக்கள் மத்தியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனை குறைக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடமேற்கு பருவமழை வருவதற்கு முன்னர், திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் நகர்ப்புற சாலைகளை மேம்படுத்த வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது அதனை அந்த மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து அடுத்த வருடம் இதே போல கடைசி இடம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்." என அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications