புயல் வேகத்தில் கமல்.. கஜா தாக்கிய நாகையில் 2வது சுற்றுப்பயணம்.. மக்களிடம் குறை கேட்கிறார்
நாகையில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் கமல்.
Recommended Video

நாகை: புயல் பாதித்த பகுதிகளில் தன் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை கமல் தொடங்கி உள்ளார். அதன்படி நாகை மாவட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.
ஏற்கனவே கஜா புயல் பாதித்த பகுதிகளை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது கஜா புயல் பாதிப்புகளின் கணக்கு விவரம் குறித்து தன்னுடைய மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள்தான் சரியான தகவலை வெளியிட்டனர் என்று சொன்னார். அதோடு மூட்டை மூட்டையாக சாப்பாடு உள்ளிட்ட நிவாரண பொருட்களை அள்ளிக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார்.

புழுத்துப்போன அரிசி
பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார் கமல். அந்த மாவட்டத்தில் சென்று நேரில் அனைத்தையும் பார்வையிட்ட பிறகு தனது ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், "தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு நல்ல சோறு போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் புழுத்துப்போன அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்" என்று காரசாரமாக பதிவிட்டார்.

துயர் துடைக்க வேண்டும்
அறிவித்திருக்கும் நிவாரண நிதி ரொம்பவும் குறைவு. இப்போது வரை நாம் எல்லாரும் செய்திருப்பது முதலுதவி மட்டும்தான். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரைத் துடைத்திட வேண்டும்" என்றும் கமல் பதிவிட்டிருந்தார்.

நாகை மாவட்டம்
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார் கமல். நாகை மாவட்டத்தில் தனது ஆய்வினை துவக்கி உள்ளார்.

அக்கரைப்பேட்டை
முதல்வேலையாக அக்கரைப்பேட்டைக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். நாகை மாவட்டம் முற்றிலுமே சிதைந்து போன மாவட்டமாகி விட்டதால், கமல் அங்கு சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களிடமே நேருக்கு நேராக பேசி குறைகளை கேட்டு வருகிறார்.

மய்ய உறுப்பினர்கள்
இதைதவிர புயலால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் கமல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆய்வு முடித்து விட்ட வந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கமல் சுற்றுப்பயணத்தில் இறங்கி உள்ளதால் மய்ய உறுப்பினர்களும் சுறுசுறுப்பாக நிவாரண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications