புயல் பாதித்த மக்களுக்காக.. யாருடனும் இணைந்து பணியாற்ற தயார்.. கமல் அறிவிப்பு
தஞ்சை, நாகை பகுதிகளில் கமல் நேரில் ஆய்வு செய்ய களம் இறங்கி உள்ளார்.
Recommended Video

திருச்சி: புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் டெல்டா மாவட்ட மக்களை சந்திக்க களத்தில் இறங்கி விட்டார். புயல் போய் ஒரு வாரம் ஆக போகுது. இன்னும் யாரையுமே அந்த பக்கம் காணோம் என்று டெல்டாவாசிகள் புலம்பி வந்தனர்.
இவர் நேற்று முன்தினம் கமல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

விமான நிலையம்
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் ஏராளமான நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்க ஆரம்பித்தார்கள். தற்போது, கமலும் நேரடியாக வந்து புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதியை பார்வையிட உள்ளார். அதற்காக சென்னையிலிருந்து இன்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார்.

தஞ்சை செல்கிறார்
விமான நிலையத்தில் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வரவேற்றனர். திருச்சியில் இருந்து முதல்கட்டமாக கமல்ஹாசன் தஞ்சை மாவட்டம் செல்ல உள்ளார். அங்கு நிவாரண பணிகளை பார்வையிட்டு அதன்பின்னர் கஜா பாதித்த மற்ற மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

கூடுதல் இழப்பீடு வேண்டும்
கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம், முதல்வர் வலியுறுத்த வேண்டும். நிவாரண உதவி போதுமானதாக இல்லை, உயிரிழப்புக்கு குறைந்தது ரூ.20 லட்சம் தர வேண்டும். தென்னைக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

நிவாரண பணிகள்
புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார். கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

நேரடியாக போகிறேன்
இன்று மேலும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல உள்ளோம். அவர்களுடன் நானும் செல்ல உள்ளேன். ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை பொருட்களாக வழங்கி வருகிறோம். இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத, நிவாரண பொருட்கள் கிடைக்காத குக்கிராமங்களுக்கும் நாங்கள் சென்று வழங்க உள்ளோம்.

தஞ்சை செல்கிறேன்
தேவைப்பட்டால் நான் அங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். முதல்கட்டமாக தஞ்சை மாவட்டம் செல்ல உள்ளேன். அங்கு நிவாரண பணிகளை பார்வையிட்ட பின்னர் கஜா புயல் பாதித்த மற்ற மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளேன்"
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications