கதறிய சித்தாள்.. விதவையின் வாயை பொத்தி.. கோயிலுக்குள் தூக்கி சென்று.. கைதான 2 பேர்.. பகீர் பின்னணி
கோயிலுக்கு சென்ற பெண்ணை சீரழித்த 2 பேர் கைதான பின்னணி வெளியாகி உள்ளது
நாகை: நாகையில் விதவை பெண்ணை, கோயிலுக்கு தூக்கி சென்று சீரழித்த 2 பேர் கைதான சம்பவத்தின் பின்னணி வெளியாகி உள்ளது!
2 நாளைக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. 50 வயது பெண், இரவு நேரம் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.. அவரை பூசாரி உட்பட 3 பேர் நாசம் செய்துள்ளனர்.. இறுதியில் ஒரு இரும்பு கம்பியை கொண்டு அவரது பிறப்புறுப்பில் செருகி, வெறி தீர கொன்றும் தீர்த்தனர்.. இந்த சம்பவம் அப்படியே நிர்பயா சம்பவத்தை போலவே உள்ளது என்பதால் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

அத்துடன், ராமராஜ்ஜியத்தை கொண்டு வருவோம் என்ற மண்ணில், கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியையும் தாங்கி வருகிறது.. இதே கேள்விதான் தமிழகத்திலும் எழுந்துள்ளது.. நாளுக்கு நாள் பெண்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே வருகின்றன.. இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால், நிலைமையே வேறு.

சம்பவம்
நாகை மாவட்டத்தை சம்பவத்தை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட பெண் ஒரு விதவை.. கணவர் பெயர் வேதையன்.. அவர் இறந்து 8 வருடமாகிறதாம்.. 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.. அவர்களை எப்படி வாழ வைப்பது என்று தெரியாமல் கலங்கி போய், தங்கையின் தயவில் வாழ்ந்து வருகிறார்..

சரோஜா
நாகை தோப்பு என்ற இடத்தில் தங்கை சரோஜாவும், அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியும் வசித்து வருவதால், அவர்களுடனேயே ஆதரவில் உள்ளார். தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சித்தாள் வேலை பார்த்து வருகிறார். எப்போது வேலைக்கு போகும்சரி, வரும்போதும் சரி, வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் பிள்ளையார் கோயிலில்தான் சாமி கும்பிட்டுவிட்டு செல்வாராம்.

பிள்ளையார் கோயில்
வேலை முடிந்து கூலியை வாங்கி கொண்டு திரும்பி வர லேட்டானாலும் சரி, கோயிலுக்கு போய் சாமிகும்பிட்டு விட்டுதான் போவாராம்.. அப்படித்தான் கடந்த 6 -ம் தேதி இரவு 9 மணிக்கு கோயிலுக்கு வந்துள்ளார்.. திடீரென வந்த 2 பேர் அப்படியே சித்தாளின் வாயை பொத்தி கோயிலுக்கு உள்ளேயே தூக்கி கொண்டு போய்விட்டனர்.. பிறகு மாறி மாறி சித்தாளை நாசம் செய்துள்ளனர்... நடந்ததை வெளியே சொன்னால், உன் வீட்டுக்கே வந்து உன்னுடைய 2 பெண்களையும் உன்னை செய்ததுபோலவே நாசம் செய்திடுவோம் என்று அந்த இளைஞர்கள் மிரட்டி உள்ளனர்.

அலறல்
இரவு 2 மணி இருக்கும்.. தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.. அக்காவை பார்த்ததுமே சரோஜா அலறி துடித்துள்ளார்.. நடந்தது என்ன என்று அறிந்த சரோஜாவின் கணவர், சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டார்.. ஆனந்தராஜ் 25, அருள்ராஜ் 25, இந்த 2 பேர்தான் அவர்கள் என்று உறுதியானபிறகு, பஞ்சாயத்தாரிடம் சென்று புகார் சொல்லி இருக்கிறார்.. ஆனால், அவர்கள் இந்த புகாரை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை என்கிறார்கள்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அருள்ராஜ், விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.

கைது
இவ்வளவும் நடந்த பிறகு நேற்றுதான் அதாவது 7-ம்தேதிதான் போலீசில் வந்து புகார் தந்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.. கோயிலுக்கு போன பெண்ணுக்கு, அதுவும் ஒரு விதவைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ஆச்சரியம், அதிர்ச்சியில் தமிழக மக்கள் உறைந்து போய் உள்ளனர்!
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications