முதல்வர் வருவதால் உங்களை அனுமதிக்க முடியாது... பிரேமலதா விஜயகாந்திடம் போலீஸ் கட் அன்ட் ரைட்..!
நாகை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது.
புயல்-மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தமிழக அரசின் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தில் உள்ள முகாம் ஒன்றுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுத்த போலீஸார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த முகாமில் தங்கியுள்ள மக்களை சந்திக்க வரவுள்ளார் என்றும் அதனால் உங்களை அனுமதிக்க முடியாது எனவும் பிரேமலதாவிடம் கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து தேமுதிகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கோபம் கொப்பளிக்க அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் பிரேமலதா விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக கருதப்படும் சூழலில் இந்த நிகழ்வு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
போலீஸார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சட்டநாதபுரம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கவிருந்த நிவாரணப் பொருட்களை வேறு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கச் சென்றார் பிரேமலதா விஜயகாந்த்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிகவை கழற்றிவிடுவதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வு எனத் தெரியவில்லை. இதனிடையே ஜனவரி மாதம் கூட்டணி நிலைப்பாடு குறித்து தேமுதிக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications