“கொள்கையும் கிடையாது.. கோட்பாடும் கிடையாது.. பேரு மட்டும் இந்தியா கூட்டணியாம்!” சீமான் தாக்கு
நாகப்பட்டினம்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான், இந்தியா கூட்டணி மீது சரமாரி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 39 தொகுதிகளும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. எனவே, வேட்பாளர்கள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான் இந்தியா கூட்டணி குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார். நாகை லோக்சபா தொகுதி நன்னிலம், திருவாரூர், நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இந்த தொகுதி இருக்கிறது.
இந்த முறையும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் திமுக தலைமையில் களமிறங்கியுள்ளது. சிபிஐ வேட்பாளராக வி.செல்வராஜ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கரும், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று நாகையில் வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சீமான், “கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாததுதான் இந்தியா கூட்டணி. கேரளாவுக்குள் எதிர்க்கட்சி கேரளாவுக்கு வெளியே கூட்டணி. கர்நாடகாவில் இருந்து நீரை பெற்று தர முடியவில்லை; அப்புறம் எதற்கு இந்தியா கூட்டணி? மொத்தத்தில் இந்தியா கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? நாட்டையும் காப்பாற்ற போகிறோம் என இந்தியா கூட்டணி ஏமாற்றுகிறது.
இயற்கை வளங்கள் இஷ்டத்திற்கு சுரண்டப்பட்டிருக்கிறது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து 39 எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினோமே, திமுக நமக்கு என்ன செய்தது? நமது வளத்தை அழிக்கும் மீத்தேன், ஈத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்தான். இது குறித்து அவர்கள் பெருமையாக பேசியிருக்கிறார்கள். இதை எதிர்த்து மக்கள் போராடிய பின்னர், தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டோம் என்று மழுப்பினார்கள்” என்று திமுக மற்றும் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாதக வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருந்தார். குறிப்பாக அவரை ஒருமையில் பேசியருந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications