ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை?... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்
நாகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே பிரச்சனைகள் ஏதுமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக-விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்த காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தல் முடிவை அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதற்காகவே, வழங்கப்பட்ட முடிவாக பார்க்கிறோம். மேலும் மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைவது மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக ஆட்சி அமையும் என மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரம் செய்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது அதில் தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதலமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம் என்றார்.
தற்போது வரை தமிழகம் முழுவதும் 1 கோடியே 99 இலட்சத்து 48 ஆயிரத்து 865 ஸ்மார்ட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 2,63,432 ஸ்மார்ட் கார்டுகள் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகள் அமல் காரணமாக குடும்ப அட்டை வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது 1,96,181 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவைகள் அச்சடிக்கும் பணியும் துவங்கப்பட்டுவிட்டதாகவும் அவைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவர்கள் இருவரும் இணைந்த கைகளாக இந்த ஆட்சியை வழி நடத்தி செல்வதாகவும், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, மோடி தலைமையிலான அமைச்சரவையில், அ.தி.மு.கவிற்கு வழங்கப்பட இருந்த ஒரு அமைச்சர் பதவியும் யாருக்கும் கிடைக்காமல் போனதிற்கு உட்கட்சி பூசல் என சொல்லப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் செயலால், அக்கட்சியிலுள்ள முன்னணி நிர்வாகிகள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்களாம். இவ்விவகாரம் அ.தி.மு.கவில் பெரிய புகைச்சலை ஏற்படுத்தும் நிலையில், விவகாரம் பெரிதாகி இருப்பதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications