40 வயதுதான்.. கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டு பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் மரணம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரத்தியேக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அனுமதிக்கப்பட்டார்.
இவரது சொந்த ஊர் கோடிமுனை. குவைத் சென்றிருந்த அவர் கடந்த மூன்றாம் தேதி தமிழ் நாடு திரும்பியிருந்தார்.

பிற பாதிப்புகள்
அவருக்கு, மூளைக்காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரது ரத்த மாதிரிகள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள பரிசோதனை பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

40 வயதுதான்
அவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தாரா என்பது பற்றி பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு தான் உறுதியாக தெரிய வரும்.
இறந்த நபருக்கு 40 வயதுதான் ஆகிறது என்ற தகவல் சற்று அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் கன்னியாகுமரி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

பெண்
கன்னியாகுமரி அரசு மருத்துமனையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு இல்லாத 59 வயது பெண்மணி இறந்தார். அவருக்கும் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தப் பெண்மணி இறந்த பிறகு அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டன.

பாதிப்பில்லை
இந்த ஆய்வு முடிவுகளில், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்த நிலையில், தற்போது, 40 வயது நபர் கொரோனா வார்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்க கூடாது என மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications